PRONOLOGY
உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் காலம் எது?
நமது குழு நண்பர்களுக்கு வணக்கம்.
நேற்று நமது வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் ஆண்டுகள் எவை என்பதை பார்த்தோம். நீங்களாகவே உங்களது வயதை கணக்கிட்டு, இந்த வயது, இந்த ஆண்டில் உள்ள பலனை அறிந்து கொள்ளலாம் .
இதற்கு நீங்கள் இந்த பிறந்த நாள் முதல் அடுத்த பிறந்த நாள் வரை உள்ள உள்ள 365 தினங்களை, உங்களுககு ஒரு ஆண்டாக கணக்கிட வேண்டும்.
இங்கு மேலும் மீதம் உள்ள எண்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தக்கூடிய எண்களைப் பற்றி பார்ப்போம்.
4ஆம் எண்ணில் பிறந்தவர்கள்
இவர்களுக்கு 1 3 5 6 9 எண் வரும் ஆண்டுகள் நன்மையைச் செய்யும் .எண் 4 7 8 வரும்
ஆண்டுகள், கஷ்டங்களைக் கொடுக்கும். அதற்கு தகுந்த பூஜைகள் பரிகாரங்கள் செய்து கொள்ளலாம்..
5 ஆம் எண்காரர்களுக்கு அதிர்ஷடம் தரும் வயதுகள்
இவர்களுக்கு 1 3 4 5 6 9 ...இந்த எண் வரும் ஆண்டுகளில், நற்பலன்கள் ஏற்படும் .ஆனால் 2 7 8 ஆகிய வருடங்களில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும்.
6 ஆம் எண்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரும் வயதுகள்
இவர்களுக்கு 1 4 5. 6 9 ஆகிய ஆண்டுகள் நன்மை செய்யும் .மற்ற 2 3 7 8 ஆகிய ஆண்டுகள் தீமைகளை செய்யும்.
7 ஆம் எண்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் வயதுகள்.
இவர்களுக்கு 2 ,5 , 6, 9 ஆகிய ஆண்டுகள் நன்மையைச் செய்யும். 1 3 4 7 8 ஆகிய ஆண்டுகள் கெடுதலை செய்யும்.
8 ஆம் எண்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வரும் வயது
இவர்களுக்கு 1 4 5 6 9 ஆகிய எண்கள் வரும் வயதில் நல்ல பலன்கள் ஏற்படும் . 2 3 7 8 வரும் ஆண்டுகளில் தீமைகளை ஏற்படுத்தும் .
9 ஆம் எண்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரும் வயதுகள்..
இவர்களுக்கு 1 3 5 6 9 ஆகிய ஆண்டுகள் நன்மைகள் செய்யும் . மற்ற 2 4 7 8 ஆகிய ஆண்டுகள் தீமைகளை ஏற்படுத்தும்.
இதுவரையிலும் அனைவருக்கும் அதிர்ஷ்டம் ஏற்படும் வயதுகளை பற்றி தெரிந்து கொண்டோம்.
இப்போது நீங்கள் பெயரை மாற்றிய உடன், முதலில் தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எழுதி வரவேண்டும் என்று பார்த்தோம் .
மேலும் கண்ணாடிப் பயிற்சி என்று ஒன்று உள்ளது. இது மிகவும் முக்கியமான ஒரு பயிற்சி ஆகும். இதை அனைவரும் செய்யலாம் .பெயர் மாற்றியவர்கள் ஓரடி* ஓரடி உள்ள நிலைக் கண்ணாடிக்கு முன் நின்று ,தங்களது பெயரை ஓரளவு சத்தத்துடன் சொல்லி வர வேண்டும்
" நான் வலிமை பெற்று விட்டேன் "
"வெற்றி அடைந்து வருகிறேன்"
" என் வேலையை விரும்புகிறேன் "
"நல்ல முன்னேற்றங்களை அடைந்து வருகிறேன்" "எனது குடும்பத்தில் சந்தோசமக இருக்கிறேன்"
"என்னிடம் இலட்சக்கணக்கான பணம் உள்ளது"
என்று எல்லா விஷயத்தலும் சந்தோசமக இருப்பதாக, கண்ணாடியில் இருக்கும் உங்கள் பிம்பத்தை பார்த்து சொல்லி வர வேண்டும்.
அப்போது பிம்பத்தில் உள்ள நீங்கள் ,அதையே திருப்பி சொல்வீர்கள். அது உங்கள் மீது ஒலிக்கிறது. எனவே உங்களது மனதிற்கு அந்த விஷயங்கள் மிக சீக்கிரம் சென்றுவிடும் .அப்போது நல்ல பலன்களை நீங்கள் சீக்கிரம் அடையலாம்.
பெயர் மாற்றாத ஒருவர்கூட தாங்கள் அடைய வேண்டிய வெற்றிகளை கண்ணாடி முன் நின்று சொல்லிக்கொள்ளலாம்
.இது தன்னம்பிக்கை பயிற்சியாகும். ஆனால் காலையில் செய்வது நல்ல பலனைத் தரும்.
நமது குழு நண்பர்கள் இந்த கண்ணாடிப் பயிற்சியை தினமும் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 10 நிமிடங்கள் செய்ய வேண்டும். நீங்கள் விரும்பும் எந்த விஷயத்தையும் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும்
அப்போதுதான் உங்களால் ஆழ்மனதிற்கு கட்டளையிட முடியும் . ஆழ்மனது எப்போது நம்புகிறததோ,நிச்சயம் அது நிஜ வாழ்க்கையில் வந்துவிடும்.
வாழ்த்துக்கள்
நாளை சந்திப்போம்..