Thursday 24 September 2020

வேதாந்த எண்கணிதம் குழு அன்பர்களுக்கு.



 வணக்கம்.நமது குழுவின் 60  நாட்கள் இத்துடன் முடிவடைகிறது. எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும், உற்சாகப்படுத்திய  நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .உங்களது சந்தேகம் எதுவானாலும் எனது தனிப்பட்ட முறையில் கேள்வி கேட்கலாம்.

 உங்கள் பெயர் சம்பந்தப்பட்ட ஆலோசனைகளுக்கும் என்னை எப்போதும் அணுகலாம். எனவே எனது நன்றி அனைவருக்கும் உரித்தாகுக. இந்த குழுவை ஆரம்பித்து எனக்கு உதவிய திரு சங்கர் ஐயர் அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

PRONOLOGY பெயர் ஜாதகத்தின் பலன்களை அறிவது எப்படி


PRONOLOGY

  பெயர் ஜாதகத்தின் பலன்களை அறிவது எப்படி?

நேற்று (எல் நந்தகுமார்) L NANDAKUMAR அவர்களின் பெயர் ஜாதகத்தை அமைத்தோம். ஒரு தடவை அதை மீண்டும் படித்துக் கொள்ளுங்கள். இப்போது அந்த ஜாதகத்தின்  பலன்களை பார்ப்போம். 

முதல் ராசியில் அதாவது மேஷ ராசியில் R  எழுத்து உள்ளது. R  என்ற எழுத்தானது ,வேகமானது பலம் வாய்ந்தது .ஆக்ரோஷம் நிறைந்தது .எனவே இது  மேஷ லக்னத்தில் R   இருபாபதால் , இவர்  வேகமானவர் துடிப்பானவர் ,எதையும் செய்ய நினைப்பவர் .திறமையும், தன்னம்பிக்கையும்  உண்டு. 

அடுத்ததாக இரண்டாம் இடமான ரிஷபத்தில் U  என்ற எழுத்து உள்ளது. இதனால்  அறிவு ,திறமை ,பேச்சு திறன் இருக்கும் . பேச்சின் மூலம் பல காரியங்களை சாதிப்பார் . இரண்டாம் இடமாக இருப்பதால், பணமும் வந்து சேரும் .இது நல்லதுதான்.
 
மூன்றாம் இடத்தில் எழுத்துக்கள் எதுவும் இல்லை .எனவே வீரம் தைரியம்  குறைவு படுகிறது. அடுத்து நான்காம் இடமான கடகத்தில் NA  என்ற இரண்டு எழுத்துக்கள்  இருப்பதால், இவருக்கு கல்விச்செல்வம் உண்டு. வீடு , வசதிகள்  உண்டு. 

ஆனால் NA  என்பது இல்லை  ,(NO)என்பதை குறிப்பதால், கல்வி மற்றும் வசதிகளில் குறைபாடுகள் உண்டு. அல்லது அதிக  அளவுக்கு முடியாது அல்லது அனுபவிக்க முடியாது. 

அடுத்ததாக ஐந்தாம் meஇடமான சிம்மத்தில் எம் ஏ (M A) மா என்று  இருப்பதால் இவர் இரக்க குணம் படைத்தவர் .எல்லாரையும் நன்றாக பார்த்துக் கொள்வார்(MAM). இது நல்ல நிலையாகும். 

அடுத்து  6  7 ஆகிய கட்டங்களில் (கிரகங்கள்)
 எழுத்துக்கள் இல்லை. எனவே அந்த ஸ்தானத்தின் பலன் குறைகிறது. மனைவி ஸ்தானம் பாதிக்கப்பட்டுள்ளது .இதனால் திருமணம் தடை ஆகலாம் .தாமதமாகலாம். 

அடுத்து எட்டாம் இடத்தில் N என் இருப்பதால் இவர்களுக்கு உடலில் ஏதாவது ஒரு பாதிப்பு இருக்கும் .நடுவயதிற்கு மேல், கால் வலி ,வயிற்று வலி வர வாய்ப்புண்டு. 

அடுத்து ஒன்பது, பத்து ஆகிய இடங்களில் (9 ,10 )இடங்களில் எழுத்துக்கள் இல்லை. எனவே இவருக்கு பாக்கியஸ்தானம்  குறைவு படுகிறது. அதே போன்று தொழில் ஸ்தானமும் பாதிக்கப்படுகிறது. எனவே தொழிலில் பெரிய அளவில் முன்னேறுவது தடுக்கப்படுகிறது. இவர் எனவே இவர் பெயரை சிறிது மாற்றி 9 ,10 இடங்களில் எழுத்துக்கள் வரும்படி  அமைத்தால் இவருக்கு யோகங்களும் நல்ல தொழில் வளமும்  உண்டாகும். ஜாதகத்தில் அவ்வாறு செய்ய முடியாது. 

எனவேதான் பெயர் ஜாதகம் மிகவும் வலிமை உள்ளதாக இருக்கிறது . நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. எளிதாகவும் இருக்கிறது. 

அடுத்ததாக 11-ம் இடத்தில் கும்பத்தில் டி ஏ (DA)என்ற எழுத்துக்கள்  இருப்பதால் இவருக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும். செய்கிற தொழில் பேரும் புகழும் கிடைக்கும். DA என்பது DAY பகல் என்று ஒலிக்கப்படும். எனவே தொழிலில் லாபம் பெரும் புகழ் இருக்கும் .

அடுத்து கடைசி இடமான மீனத்தில் எல் கே (L K)என்ற எழுத்துக்கள் இருப்பதால் வெளிநாட்டு தொடர்புகள் ஏற்படும் , பல  பயணங்களும் ஏற்படும். மேலும் அது சார்ந்த செலவுகளும் ஏற்படும் . விருப்பம் என்பது (LK)லைக் என ஒலிப்பதால், இவருக்கு  சுபவிரயங்கள்  ஏற்படும். 

பயணங்களுக்காக செலவு செய்வார் .மொத்தத்தில் இவருடைய பெயர ஜாதகம் நன்கு உள்ளது. எட்டாமிடம் பாதிக்கப்பட்டுள்ளது .மற்றபடி மற்ற நல்ல இடங்களான 1 2  4 5  11  12 இடங்களில்  எழுத்துக்கள் இருப்பதால் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருப்பார். 

ஆனால் நந்தகுமார் என்ற பெயர் எதிரிடை ஒலியில் (NEGATIVE) இருப்பதால், நல்ல பலன்களை முழுவதும் அனுபவிக்க முடியாது. கல்வி. தொழில் ஆகியவற்றில்  பல பிரச்சினைகள்  ஏற்பட்டிருக்கும்.

 இந்த பெயரை மாற்றி, பெயர் ஜாதகப்படியும்  நல்ல முறையில் அமைத்துக் கொண்டால் . இவர்  நன்கு முன்னேறுவார் .இது மிகவும் முக்கியமான அத்தியாயம்.
 
ஒவ்வொருவரும் உங்களது பெயர் ஜாதகத்தை ஆராய்ந்து PRONOLOGY படி  பெயரை மாற்றி, பெயர் ஜாதகப்படி நல்ல இடங்களில் எழுத்துக்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.நீங்கள் நிச்சயம்  வெற்றி பெறலாம். அனைத்திலும்  வெற்றி பெறலாம் .

இது மிகவும் அற்புதமான ஒரு முயற்சி . அரிய  செயலாகும். நமது வாழ்க்கை நமது கையில். 
அதை  பெயர் ஜாதகம் மூலம் அடையலாம். இது நிச்சயம் பலன் தரும்.

 எனது புத்தகங்களில் பெயர் ஜாதகப்படி பிரபலமான மனிதர்களின் பலன்களை எழுதியுள்ளேன்.  PRONOLOGY சாஸ்திரம் என்ற என் புத்தகத்தை அனைவரும் வாங்கிப் படிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

மேலும் உங்களது பெயர் மாற்றம் சம்பந்தமாக என்னை சந்திக்கலாம்.
 வாழ்த்துக்கள்.

Friday 18 September 2020

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

PRONOLOGY பெயர் ஜாதகம் எப்படி அமைப்பது என்பதை பற்றி பார்ப்போம்!


PRONOLOGY 

பெயர் ஜாதகம் அமைப்பது எப்படி?

முதலில் ஆங்கில எழுத்துக்களை வரிசையாக எழுதிக் கொள்ளுங்கள்.
 
A B C D E F G H I J K L M N 
1 2  3. 4. 5. 678. 9 10 11 1213 14
O P Q R S T U V W X Y Z 
15 16 118 19 20 21 22 23 24 25 26
ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் கீழே அதன் வரிசை எண்ணை எழுதிக்கொள்ளுங்கள்.
 A 1, B 2, C 3 என வரிசையாக யாக எழுதிக்கொள்ளுங்கள்.
 இறுதியில் Z  26. ஆக வரும்.
 இந்த  எண்  அட்டவணையை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். அல்லது  தனியாக எழுதிக்கள்ளுங்கள்.

 இது பெயர் ஜாதகம் அமைக்க  ஒரு  முக்கிய அம்சமாகும் .
இப்போது ஒருவரின் பெயரை, எப்படி பெயர்ஜாதகத்தில் இணைப்பது என்று பார்ப்போம் .

ஒரு அன்பரின் பெயர் L NANDAKUMAR  நந்தகுமார் என்போம் .இவரது பெயர் ஜாதகத்தை எப்படி அமைப்பது என்று பார்ப்போம்!

பெயரின் இனிசியல் L ஆனது 12 ஆம் எழுத்தாக வரும். எனவே பெயர் ஜாதக கட்டத்தில் பன்னிரண்டாம் இடத்தில் L எழுத்தைக்  குறிக்கவும்
 .
அடுத்து N எழுத்தின் வரிசை எண்ணானது  14 ஆகும்.  இதில் ஒன்பது 9 ஐ கழித்துக் கொள்ள வேண்டும்.மீதி உள்ள 5 ஐத் தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும.

இப்போது N  என்ற எழுத்தை, மீனத்தில் இருந்து ஐந்தாம் இடமான கடகத்தில்  எழுதிக் கொள்ளவும்.  A என்பது முதல் எழுத்தாக இருப்பதால் ,அதை கடகத்திலேயே  எழுதிக்  கொள்ளவும்

 .பிறகு N  என்ற எழுத்தை முன்பு மாதிரி  கடகத்தில் இருந்து ஐந்தாம் இடத்தில் அதாவது விருச்சிகத்தில் எழுதிக் கொள்ளவும்  (14--9==5).அடுத்து உள்ள D  எழுத்தை, அதற்கு நான்காம்  இடத்தில்  (D=4)அதாவது கும்பத்தில் எழுதிக் கொள்ளவும். காரணம் D என்பது, எழுத்துக்கள் வரிசையில் நான்காவது எழுத்தாகும் .பின்பு A எழுத்தையும்  கும்பத்தில்  எழுதிக் கொள்ளுங்கள்.

.அடுத்து K  எழுத்தை இரண்டாம் இடமான   மீனத்தில் ( K எழுத்து வரிசையில் 11 ஆகும்.11--9==2) குறிக்கவும்.அடுத்து   U எழுத்தை ,அதன் மூன்றாவது இடமான ரிஷபத்தில்  எழுதிக் கொள்ளுங்கள்.காரணம் U எழுத்து ஆங்கில எழுத்து வரிசையில் 21 ஆகும். அதில் 18ஐ  கழிக்க, மூன்று வரும் (21--18==3).எனவே இதை ரிஷபத்தில்   குறிப்பிட வேண்டும். 

அடுத்து M  என்ற எழுத்தை , ரிஷபத்தில்  இருந்து நான்காம் வீடான சிம்மம்  இராசியில் எழுதி  வைத்துக்கொள்ள வேண்டும். காரணம் M என்பது பதிமூன்றாம் எழுத்தாகும்.
 

அதில் ஒன்பது கழிக்க நான்கு வரும்(13 --9==4) .எனவே M  எழுத்தை   ரிஷபத்திலிருந்து 4 ம் இடமான சிம்ம ராசியில் குறிக்க வேண்டும் .

அடுத்து உள்ள A எழுத்தை முதல் இடத்திலேயே அதாவது  சிம்மத்தில்  குறிக்க வேண்டும் .

அடுத்து உள்ள R  எழுத்தை சிம்மத்திலிருந்து‌ 9 ஆம் இடமான மேஷ  ராசியில் (18--9==9) குறிக்க வேண்டும்.காரணம் R , எழுத்தின்   வரிசை எண் பதினெட்டாகும் .இதில் ஒன்பதைக்  கழித்தால் ஒன்பது கழித்தால்  9 வரும். எனவே சிம்மத்திலிருந்து  இருந்து ஒன்பதாம் இடமான மேஷத்தில்  அந்த எழுத்தைக் குறிக்க வேண்டும் .

இதுவே எல் நந்தகுமார்  L NANDAKUMAR என்பவரின் பெயர் ஜாதகம் ஆகும் .இந்தப் பாடத்தை நன்கு படியுங்கள். அதாவது ஒரு எழுத்தின் எண்  வரிசையை, முதல் எழுத்தின் (1) இடத்திலிருந்துதான்  கணக்கிட வேண்டும் .இதுதான் முக்கியமான விஷயம்.
இந்தப் பெயரின் பயன்களை எப்படி அறிவது என்பதை பற்றி நாளை பார்ப்போம் இது மிகவும் முக்கியமான அத்தியாயமாகும் பல தடவை படித்து மனதில் நிறுத்திக் கொள்ளவும் 

நாளை சந்திப்போம்

PRONOLOGY உங்கள் விதியை மாற்றக்கூடிய உங்கள் விதியை மாற்றக்கூடிய பெயர் ஜாதகம் .நேம் சார்ட்,(NAME CHART)

PRONOLOGY

பெயர் ஜாதகம்__ உங்கள் பெயரின் புதிய கோணம்!

ஒவ்வொரு மனிதனுக்கும் ஜாதகம் என்பது பிறவியிலேயே அமைந்து விடுகிறது .அந்த; ஜாதகர் பிறந்தத நேரத்தில் இருந்த கிரகங்களின் கோச்சார நிலையே ஜாதகம் எனப்படுகிறது. .

ஜாதகத்திலன் முக்கியத்துவத்தை இக்காலத்தில் மக்கள் நன்கு அறிந்துள்ளனர். இதில் ஜாதி, இன, மத பேதம் இல்லாமல் அனைத்து இன மக்களும் தங்களின் ஜாதகத்தையும் ,தங்களது குடும்பத்தாரின் ஜாதகங்களையும் குறித்து வைத்துள்ளனர். இது மிகவும் பாராட்ட கூடிய மஒன்றுதான் .

ஆனால் இந்த ஜாதகம் எத்தனை பேருக்கு சாதகமாக இருக்கும்! என்று சொல்ல முடியாது .உலகத்தில் இதுவரையிலும் பிறந்த கோடிக்கணக்கான மக்களுக்கும் சரி, இனிமேல் பிறக்க இருக்கின்ற மனிதருக்கும் சரி ,யாருக்குமே ஒன்பது கிரகங்களும் நன்மை செய்யாது!

 ஏன்? தெய்வங்களே மனிதனாக பிறக்கும் பொழுதும், சில கிரகங்கள் பாதிக்கப்பட்டன . அவர்களும் மிகவும் துன்பங்களையே அனுபவித்தனர்.

எனவே ஜாதகத்தின் விதியை மாற்ற முடியாது. ஆனால் உங்களுக்கு ஒன்று ஒரு பெயர் உள்ளது. அந்தப் பெயரை நியூமராலஜிப்படி மூலம் சிறப்பாக அமைத்துக் கொள்ளும்போது உங்கள் வாழ்க்கை நன்கு அமையும். 

உங்கள் ஜாதகம் சிறப்பாக இல்லாவிட்டாலும், பெயர் ஜாதகம்  மட்டும் நன்கு அமைத்து விட்டால் ,பின்பு உங்கள் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி தான். 

ஜாதகம் என்றால் என்ன? ஜாதகம் என்பது கிரகங்களின் அமைப்பைக் குறிப்பதாகும்.

ஆனால் இந்த புதிய பெயர் ஜாதகம்(NAME CHART) என்பது மிகவும் சிறப்பானது. இதை நமது விருப்பத்திற்கு ஏற்பமாற்றிக்கொள்ள முடியும். பெயரை மாற்றுவதன் மூலம் நமது வாழ்க்கையே மாற்றிவிடலாம்.
 
மனிதனின் ஜாதகத்தில் நவக்கிரங்கள், அவைகளின் இயக்கத்தின் படியே குறிக்கப்பட்டிருக்கும். 

ஆனால் பெயர் ஜாதகத்தில், ஆங்கில எழுத்துக்களில் உள்ள  26  எழுத்துக்களும் ஒரு குறிப்பிட்ட கணித முறையில் பெயர் ஜாதகத்தில் குறிக்கப்படும். 

இதுவும் மேசத்தில்  இருந்துதான் 12 வீடுகளை  எடுத்துக்கொள்ளவேண்டும். .
மேஷம் முதல் வீடு , ரிஷபம் இரண்டாம் வீடு, மிதுனம் மூன்றாம் வீடு என்று வரிசையாக மீனம் பன்னிரெண்டாம் வீடு என்று எடுத்துக் கொள்ள வேண்டும் .

இதில் உள்ள 12 வீடுகளிலும் நமது பெயரின் எழுத்துக்களை  நிரப்ப வேண்டும் .எந்தெந்த ராசிகளில் எழுத்துக்கள் நிரம்பியுள்ளதோ  அவை நற்பலன்களை ஏற்படுத்தும். 

எந்தெந்த ராசியில் எழுத்துக்கள் இல்லையோ அந்த ராசி அல்லது அந்த காரகத்துவம் மனிதனுக்கு குறைவு படுகிறது..

ஆங்கில எழுத்துக்கள் 26-ம் மிக பலம்வாய்தவை. ஒவ்வொரு ஆங்கில எழுத்தையும்  ஒரு கிரகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

 ஒரு பெயரை  பெயர் ஜாதகம் முறையில் அமைக்கும்போது ,ஒரு ராசியில் எத்தனை எழுத்துக்கள் உள்ளனவோ, அத்தனை கிரகங்களும் அங்கு இருப்பதாக கொள்ள வேண்டும்.பெயர்  ஜாதகப்படி நல்ல எழுத்துக்கள் அமையும் ராசிகள், நல்ல பலன்களை கொடுக்கும், தீய  எழுத்துள்ள ராசிகள் தீய பலன்களைக் கொடுக்கும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்

படத்திலுள்ள ராசி கட்டத்தை பாருங்கள். இதன்படியே ஒரு ராசி கட்டத்தை நீங்கள் வரைந்து கொள்ள வேண்டும். பிறகு உங்களது ஜாதகத்தை உங்களது பெயரை  தனியே எழுதிக் கொள்ளுங்கள். பெயரில்  உள்ள எழுத்துக்களை இந்த கட்டத்தில்  வரிசைப்படி நிரப்ப வேண்டும்.

 இது மிக மிக முக்கியமான அத்தியாயம். இது என்னால் கண்டுபிடிக்கப்பட்டது. அற்புத பலன்களை அளிக்கக் கூடியது. முதலில் உங்களுக்கு அமைப்பது சற்று சிரமமாக இருந்தாலும் பிறகு நன்கு பழகிவிடும் .உங்களதுபுதிய பெயரின் பலன்களை  நீங்களே அறிந்து கொள்ளலாம் .இதை அமைப்பது எப்படி? என்பது பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்

Thursday 17 September 2020

PRONOLOGY பெண்களின் பெயர்களும் அவர்களது வாழ்க்கையும்

PRONOLOGY
பெண்களின் பெயரில் உள்ளேன் பலன்களை அறிவது எப்படி?

நேற்று திரு இராமலிங்கம் அவர்களின் பெயருக்கு பலன்களை அறிந்து கொள்வது எப்படி என்பதை பார்த்தோம். அதே மாதிரி பெண்களின் பெயர்களின்  பலன்களை எப்படி அறிவது? என்பது பற்றி பார்ப்போம் !
பெண்களின் பெயர் படியே தான், அவர்களது கல்வி, தொழில்  அமைகிறது. மேலும் திருமண வாழ்க்கையும் அமைகிறது. 

இப்போது ஒரு  பெண்ணின்  பெயர் வள்ளியம்மாள் என்பதாகும். அவர் பிறந்த தேதி 8 3 1978. இவரது பிறந்த தேதி எண்கள் 8  & 9 .இவரது பெயரின் பலனகளை எப்படி அறிவது என்பது பற்றி பார்ப்போம்.

 இவர் பிறந்த தேதி எண்கள் 8 மற்றும் 9 .இதன்  பலன்களை  எண்கணித சாஸ்திர மூலம் அறிந்து கொள்ளலாம் .

இவரது பெயரின் பலன்களை எப்படி அறிந்து கொள்வது என்பதுதான் முக்கியமான விஷயம். PRONOLOGY மூலம் பார்ப்போம்.

ஆர் வள்ளியம்மாள் என்ற
பெயரை தனியே எழுதிக்கொள்ளுங்கள்.

R VALLIAMMAL 
2   6133114413=29

இவளது பெயர் எண் 29. இது சந்திரன் ஆதிக்கத்துககு உட்பட்டது . சந்திரனின்  எண்களில் 29 எண் மிகத் தீய பலன்களை அளிக்கும். குடும்ப வாழ்க்கையில் பல பிரச்சனைகள்  ஏற்படும் .மணமுறிவு வரை கொண்டு செல்லலாம் என்று  எண்கணிதம்  கூறுகிறது. 

இவர் பிறந்த தேதி எண்கள் 8 மற்றும் 9 . இந்த பிறந்ததேதி எண்களுக்கு, 29 எண்  மிக கெடுதல் செய்யும். எனவே ஆரம்பத்தில்  இவருக்கு திருமணத்தடை உண்டாகும். சரியான வாழ்க்கை துணைவர் கிடைக்காது. திருமண வாழ்க்கையிலும் பல பிரச்சனைகள் ஏற்படும். 
(2 ஆம் எண் 9 ஆம் எண்ணிற்கு எதிரிடையானது)

எனவே எப்போதும் வீட்டில் சண்டைகள் இருக்கும் .கணவனது பெயர் நல்ல ஒலியில் இருந்தால், இவரை அணுசரித்து செல்வார். ஓரளவு சமாளிக்க முடியும் 
இல்லையெனில் குடும்ப வாழ்க்கை பிரச்சனை தான். 
இப்போது இவர் பெயர்  பற்றி பார்ப்போம்.

 R V A L L I A M M A L
R V +VA+ALL+I AM +MAL

என்று  இந்த பெயரை பிரிக்கலாம். இப்போது அந்த இரண்டு/மூன்று 
 எழுத்துக்களை, ஆங்கிலத்தில்  உயிரெழுத்துகள்  கொண்டு A E I O U ஆகிய எழுத்துக்களை கொண்டு இணைக்கவும் .இப்போது சில ஒலிகள் (வார்த்தைகள் )கிடைக்கும் அதன் பலன்களை பெயரில் சேர்த்துத்ப் பார்க்கவும் .அப்போது இந்த அம்மையாரின் குணங்கள் பற்றி தெரியும்

R V அறிவு என்பது என்றால் குடும்பத்தில் தன்(we family,R  வேகம்) ஆதிக்கம் இருக்க வேண்டும் என்று விரும்புவார். VA(WAY) என்றால் வாழ்க்கை என்று பொருள். எனவே இவரது குடும்பம் இவரது எண்ணப் படி தான் செல்ல வேண்டும் .ALL என்பது எல்லாமே என்று அர்த்தம். எனவே இவருடைய நோக்கத்தில்தான் குடும்பம் செல்ல வேண்டும் .இன்று ஆசைப்படுவார் பெயரில் I AM  என்று வருவதால் இவர்களுக்கு  தான் என்ற எண்ணம் இருக்கும் .அதை குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லை எனில் கணவனுடன் அடிக்கடி வாய் பிரச்சனைகள் வரும் .இறுதியில் MAL (MALE)  என்று முடிவதால், ஆண் என்று ஒலிக்கும். எனவே இவருக்கு ஆளுமை தன்மை அதிகரிக்கிறது. மேலும் பெயரில் ( ILL)என்று வருகிறது .இதனால் இவருக்கு ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும் .உடம்பில் ஏதாவது ஒரு வலி அல்லது பிரச்சனை இருக்கும். அடிக்கடி ஆஸ்பத்திரி செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது .எனவே பெயர் என்ன 29 இவருக்கு ஒத்துழைக்கவில்லை .இவரது பேச்சுக்கள் இவருக்கு எதிராக மாறும்.

எனவே இவர் பெயர் எண் மற்றும் பெயரை மாற்றினால்தான் இவ்வளவு பிரச்சனைகள் தீர்வு அடையும.

குழு நண்பர்களுக்கு வணக்கம் .

உங்கள் கேள்விகளை யாரும் பதிவு செய்யவில்லை .தயவுசெய்து  பதிவு செய்தால், விளக்கம் கொடுக்க வசதியாக இருக்கும்.

 நாளை சந்திப்போம்.

Tuesday 15 September 2020

PRONOLOGY பெயிரின் பலன்களை அறிவது எப்படிஃ?


PRONOLOGY

ஒரு  அன்பரது பெயரின் பலன்களை அறிவது எப்படி?

இது மிகவும் முக்கியமான அத்தியாயமாகும் 

.இதுவரையில் எதிர்பார்த்திருந்த ஒரு முக்கிய  அத்தியாயம் இது. ஒரு பெயரின்  பலன்களை எப்படி அறிய வேண்டும்? அதற்கான வழிமுறைகள் என்ன ?என்பதுதான் இந்த அத்தியாயத்தின் குறிப்பிடத்தக்க விஷயம். 

ஒரு பெயரைச் சொன்னவுடன் அதன் பலன்களை அறிவது எப்படி ?என்று ஆய்வு  செய்வதுதான் இந்த அத்தியாயத்தின் நோக்கமாகும் 

.நீங்கள் ஒரு பெயரைச் சொன்னவுடன், அந்தப் பெயரின் பலன்களை சொல்வதற்கு அந்தப் பெயரை  தனியே நீங்கள் எழுதிக் கொண்டு, அதன் எண்களை கூட்டி கணக்கிட  வேண்டும் ..மேலும் நிச்சயமாக  பலன்கள் எண்கணிதம் மூலம் சொல்ல முடியாது (Numerology). 

பெயர் எண்களின் மூலம்   சில பலன்களை கூறலாம்.ஆனால்PRONOLOGY  முறையில் ஒரு பெயரைச் சொன்னவுடன், அந்தப் பெயரில் உள்ள ஒலிகளை ஆராய்ந்து, உடனடியாக பலன்களைச் சொல்ல முடியும் . எப்படி? நீங்கள்  யாருக்கும்  பலன்களை சொல்ல முடியும் .எனவே இந்த அத்தியாயத்தை பலதடவை படித்து  புரிந்து கொள்ளுங்கள்

உங்களை தேடி  ஒரு  நண்பர் வருகிறார். அவரது பெயர் கே இராமலிங்கம் என்போம் .அவரது பிறந்த தேதி 11 9 2001 என்பதாகும். இப்போது எண்கணிதப்படி இவரது பலண்களை பார்ப்போம்.

 பிறந்த தேதி எண் 2 மற்றும் விதி எண் 5
 
நீங்கள் இப்போது ஒரு தேதிக்கு பிறவிஎண் மற்றும் விதி  எண்களை  கண்டுபிடிக்கும் முறையை அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

K RAMALINGAM
2  214  1 3 15314===27==9
இவரது பிறந்த தேதி
11 9. 2001 எண்கள்
2 +9+2+0+0+1==14==5.

எண்கள் 2 & 5.

இவர் பிறந்த தேதியின் என்எண்களின் பலனை  NUMEROLOGY மூலம் சொல்லிவிடலாம் .இதற்கு உங்களுடைய எண் கணிதத்தில் ஆளுமை முக்கியம். பிறந்த தேதி எண்  இரண்டின் (2) பலனகளையும், அதாவது சந்திரனின் குணங்களையும் , மற்றும் விதி எண் 5 புதனின பலன்களையும் சேர்த்து நீங்கள் அவருக்கு சொல்லிவிடலாம். 
ஆனால் ஆனால் பெயரின் பலன்களை எப்படி 
சொல்வது? என்பதுதான் மிக முக்கியமாகும்.


 இவரது பெயர் எண்  27 வருகிறது.  27 என்ற எண்
நல்ல பெயர் எண் தான். .நல்ல பையன் தான் ஆனாலும் இந்தப் பெயர்  எண்  9 இல் வருகிறது. அவர் பிறந்தது இரண்டாம் தேதி. எனவே 9 என்ற இந்த பெயர்எண் அவருக்கு  பல பாதிப்புகளை கொடுக்கும் . காரணம் எண்கணிதம் படி 2 ம் எண், 9ககு எதிரிடையானது.

இப்போது கே ராமலிங்கம் என்ற பெயர் உள்ளவர் எப்படி இருப்பார்? என்பதுதான் நமது ஆராய்ச்சி 

.பெயரை தனியே எழுதிக்கொள்ளுங்கள்

K R A M A L I N G A M    

இந்தப் பெயரை  இரண்டு எழுத்தாகவும், 3 எழுத்துக்களாகும் பிரித்துக் கொள்ளுங்கள் .அப்படி பிரிக்கும் பொழுது அதற்கென்று ஒரு அர்த்தம் வரும் .அந்த அர்த்தத்தை குறித்துக்கொள்ளுங்கள்

K R + RAM +MAL +LING+ GAM
என்று ஒலிகளாகப் பிரிக்கலாம். 

இப்போது அந்த குறித்த எழுத்துக்களை  சேர்த்து  படிக்கவும். ஆங்கில எழுத்துக்களில் உயிர் எழுத்தான A E I O U  என்ற எழுத்துகளில் ஒன்றை பயன்படுத்தி,  அதை  முழுவதுமாக இணைத்து பார்க்கவும். ஒலித்து பார்க்கவும்.

 உதாரணமாக K R  என்பது  CARE  ஏன்று ஒலிக்கப்படும் .RAM என்பது RAM (ஆண் ஆடு) என்று ஒலிக்கப்படும் .MAL என்பது  MALE  என்று ஒலிக்கப்படும்.LING  என்பது LINK (தொடர்பு ),அதாவது தொடர்பு படுத்துதல் என்று பொருள்படும். இறுதியில் GAM  என்பது  GAME என்று ஒலிக்கப்படும். 

இப்போது இந்த சொற்களின்  பலன்களை  அந்த பெயருக்கு கொடுத்து பார்க்கவும். பொருத்திப் பார்க்கவும். அவருடைய குணங்கள், வாழ்க்கை பாதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
அதாவது கே ராமலிங்கம் என்பவர் மிகவும் ஜாக்கிரதையானவர். உஷாரான மனிதர். எதிலும் கவனமாக இருப்பவர். மேலும் RAM  என வருவதால் எப்போதும் சுறுசுறுப்பாகவும் (ஆண் ஆடு)செயல்படுபவர்கள் . எப்போதும்  அலைந்து கொண்டே இருப்பார் . மேலும் காரியவாதி. மேலும் தன்னம்பிக்கை உடையவர்
 தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் உடையவர். LING வருவதால் மக்களுக்கு மிகவும் நன்மை செய்பவர் .அனைவரிடமும் நன்றாக நன்கு பழகுபவர்.மக்களும் இவருடன் சென்று நன்கு பழகுவார்கள்.இதனால்  மக்கள் செல்வாக்கு வந்து விடும் .GAM(GAME) என்று பெயர் முடிவதால் இவர் அனைத்தையும் சிரமப்படாமல் செய்வார். அவர் செய்யும் செயல்களில் தீவிரம் இருக்காது அதனால்
சில சமயங்களில் ஏமாற்றங்களையும் சந்திப்பார். 

பிறந்த தேதிகளின் எண்கள் (2 &5)இவருக்கு பேச்சு திறமையும் புத்திசாலித்தனத்தையும் கொடுத்தாலும், பெயர் எண் 9  எதிரிடையாக இருப்பதால் பல காரியங்கள் முழுமை அடைய முடியாது .பொருளாதாரத்தில் ஏமாற்றங்கள் இருக்கும் 
 இவரது  பெயர் எண்ணை மட்டும் சரி செய்து, நல்ல எண்ணில்  வைத்துக் கொண்டால் இந்த பெயரே நல்ல பலன்களை கொடுக்கும் .

ஒவ்வொருவரும் தங்கள் பெயரை இதுமாதிரி பிரித்து பலன்களை அறிந்து கொள்ளலாம்.

 நல்ல பெயர் வைப்பதற்கு எப்போதும் ஆசிரியரை அணுகலாம்.

வாழ்த்துக்கள்
நாளை சந்திப்போம்

PRONOLOGY குழந்தை கோளின் பெயர்களும் அவர்களது வாழ்க்கையும்

PRONOLOGY

குழந்தைகளின் பெயர்களும் அவர்களது வாழ்க்கையும் ..

ஒவ்வொரு பெற்றோரின் கனவுகளும் ,தங்கள் குழந்தைகள்  நல்லபடியாக வளர்ந்து , சமுதாயத்தில் பெயரும் புகழும் அடைய வேண்டும்  என்பது அவர்களது ஆசை, விருப்பம் எல்லாமே .

வள்ளுவரும் சொல்லுகிறார் மகன் பிறந்த பொழுது இருக்கும்  மகிழ்ச்சியைவிட தன் மகனை சான்றோன் என்று புகழப்பட்டால்  தாய்  மிக்க மகிழ்ச்சி அடைவார்கள்  என்று சொல்கிறார்.

 அதாவது தன் மகனை
அறிவாளி, புத்திசாலி ,நல்லவன் என்ற மக்கள் பாராட்டும் போது  அவனின் 
தாய், தான்  மிகவும் பாக்கியசாலி என்று  தன்னைப் பற்றி மிகவும் பெருமிதமாக பேசிக் கொள்வார்.

 ஆனால் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கிறதா? என்றால் இல்லை! காரணம் என்று ஆராய்வோம்.

 ஒவ்வொரு குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே !என்று கண்ணதாசன் பாடுகிறார் .அந்த குழந்தை நல்லவராவதும் ,தீயவராவதும் அன்னையின் வளர்ப்பினிலே !என்றும் கூறுகிறார் .

அதாவது இறைவனால் படைக்கப்பட்ட எல்லா குழந்தைகளும் நல்லவர்களை! வல்லவர்களே.
 ஆனால்  தங்களின் தாயின் வளர்ப்புப்படியே அவர்களின் குணங்களும் ,செயல்களும் அமைகின்றன.

 மேலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் பொழுது, அவை நல்ல பெயர்களா? கல்வியைத் தருமமா? வாழ்க்கையை தருமா? என்று யோசிப்பது இல்லை.
 
தங்களுக்கு பிடித்த பெயரை வைத்து விடுகிறார்கள் .பின்பு குழந்தை கஷ்டப் படும் பொழுதும், படிக்காமல் இருக்கும் பொழுதும், முரட்டுத்தனமாக இருக்கும் பொழுதும் ,தங்களை நொந்து கொள்கிறார்கள் .இது மிகவும் விளையாட்டு தரமானது .

மக்களுக்கு நன்கு யோசித்து  வெற்றியை கொடுக்கக்கூடிய பெயர்களை வைக்க வேண்டும் .அதை விட்டுவிட்டு ,அழகான பெயர்களையும் ,யாரோ ஒருவர் சொன்ன  அதிர்ஷ்ட மில்லாத பெயர்களையும் வைத்து விடுகிறார்கள் .

பின்பு அவர்கள் கஷ்டப்படும்போது மட்டும், தாங்கள் சரியான பெயர் வைக்க வில்லையோ? என்று சிந்திக்கிறார்கள் ,.இப்போது சில குழந்தைகளின் பெயர்களை பற்றி பார்ப்போம் .


LOKESH லோகேஷ்  NAVEEN நவீன் , NANSHAN நந்தன்   RAMESH ரமேஷ் , NANDAKUMAR ,நந்தகுமார் போன்ற பெயர்களை வைக்கிறார்கள். இவை அழகான பெயர்கள் தான். 

ஆனால் இந்த பெயர் உள்ள குழந்தைகள்  வாழ்க்கையில் மிகவும் சிரமப்படுகிறார்கள். கல்வியிலும் பல தடைகள் உண்டாகிறது. படிப்பில் கவனம்  குறைகின்றது. .ஆர்வங்கள்  குறைகின்றன. 

இதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம் லோகேஷ் என்ற பெயரில் "LO "என்பது  LOW என் ஒலிப்பதால் 
 அவரகளுக்கு தன்னம்பிக்கை குறைவு ,கன்சன்ட்ரேஷன் குறைவு  உண்டாகும்.இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை .இதனால் கல்வி மற்றும் தொழிலில்  பாதிப்புகள் உண்டாகின்றன .மேலும்  NAVEEN நவீன் என்ற பெயரும் ,கல்வியில் ஆர்வத்தை குறைக்கக்கக்கடியது. மேலும் விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகமாகும்.

RAMESH  ரமேஷ்,  SURESH சுரேஷ் என்ற பெயர்களெல்லாம் திறமை அதிகமாகும். கேள்விகள் நிறைய கேட்பார்கள் .ஆனால் கவனம் குறையும். அவர் முழு முயற்சிகள் எடுத்தால் நல்ல மதிப்பெண்களை வாங்கலாம் .

NANDAKUMAR 
நந்தகுமார்,NARESH  நரேஷ் போன்ற பெயர்களெல்லாம் எதிரிடை ஒலியில் ஆரம்பிப்பதால், அவர்கள் கல்வியில் ஆர்வம் இல்லாமல் தடுமாறுகிறார்கள். மேலும் கல்வியிலும் வாழ்க்கையிலும் சிரமப்படுகிறார்கள். ASWIN, ASWATH அஸ்வத் போன்ற பெயர்கள், கல்வி சிறப்பையும், தொழில் சிறப்பையும் ஏற்படுத்தும் .

உங்கள் குழந்தை சரியாக படிக்கவில்லை என்றால் அவர்கள் பெயர் காரணமாக இருக்குமோ? என்று ஒரு முறை சிந்தியுங்கள்! எனவே ஒவ்வொரு குழந்தைக்கும் அதிர்ஷ்ட பெயர் வைக்க வேண்டியது அவசியம். இது கல்விக்கு  மட்டுமல்ல ,வாழ்க்கையில்  ஆரம்பம் முதல் இறுதிவரை வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருக்கும் .

எனவே பெற்றோர்கள் தங்களின் குழந்தையை பற்றி சிந்திக்க வேண்டும். குழந்தைகளுக்காக சொத்துகளை சேர்க்கிறார்கள். ஆனால் பெயர்கள் நல்ல பெயராக வைப்பது இல்லை. நல்ல பெயர்தான்  அனைத்துக்கும் காரணம் என்பதை அறிவீர்களா?

 இதைப்பற்றி சந்தேகம் உள்ளவர்கள் இங்கு பதிவு செய்யலாம் .

நாளை விளக்கம் சொல்லப்படும்.
வாழ்த்துக்கள்..
 நாளை சந்திப்போம்..


Monday 14 September 2020

PRONOLOGY பெண்களின் பெயர்களும் அவர்களது வாழ்க்கையும் 2


PRONOLOGY

பெண்களின் பெயர்களும் அவர்களின் குடும்ப வாழ்க்கையும் 2

ஒரு ஆண் கல்வி கற்றால் அவர் மாத்திரம்தான்  அறிவாளி ஆகிறார். ஆனால் ஒரு பெண் கல்வி கற்றாலோ அவளது குடும்பமே  கல்வியாளர்களாக  மாறிவிடுகிறது. எனவே ஆண்களைவிட  பெண்களே பலவகையிலும் திறமைசாலியாக இருப்பதைப் பார்க்கலாம். 

ஆனாலும் பல திறமைசாலியான பெண்கள், குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமாக  இருப்பதில்லை. பல வகைகளிலும்  கஷ்டப்படுகிறார்கள் .

அதற்கு அவர்களின் பெயர்கள் தான் காரணம் என்று நேற்று பார்த்தோம். மேலும் பல பெண்களின் பெயர்கள் அவர்களுக்கு கடுமையான தோஷத்தை கொடுத்து விடுகின்றன. அவர்களது  வாழ்க்கையை கஷ்டமாக்கி விடுகிறது.இங்கு  சொல்லப்படுவது எல்லாம் பொதுபலன்களே.

 ஆனால் 75 சதவீத பெண்களுக்கு நடைமுறையில் ஒத்து வருகிறது . நீங்களும்  ஆராய்ந்து பார்க்கலாம்.

KAMALA VIMALA NIRMALA MALATHI

இந்த மாதிரியான பெயர் உடைய பெண்கள், ஆண்களுக்குச் சமமாக எல்லா துறைகளிலும் விளங்குவார்கள் . பலர் ஆண்களைவிட அதிக திறமையும், அதிக சம்பளமும்  பெறுகிறார்கள் .குடும்பப் பெண்ணாக இருந்தால் , குடும்பத்தின் நிர்வாகம் இவரது கையில் இருக்கும். இவர்களிடம் பெண்மையின் நளினம் குறைந்து ,ஆண்மை குணங்களின் தன்மை காணப்படும், இவர்களுக்கு  தாம்பத்திய/குடும்ப  சுகத்தை விட ஆண்களைப் போன்று சாதனைகள் படைப்பதிலும் குடும்பம் அல்லது நிறுவனங்களை நடத்துவதிலும் ஈடுபாடு அதிகமாக இருக்கும் .

இவர்கள்தான் தங்களது  கணவனை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சி செய்வார்கள். கணவன் இவர் சொல்லை கேட்காமல் இருந்தாலும் அவர்கள் குடும்பத்தில் பிரச்சினை உண்டாகிறது.

 இந்தப் பெயர கொண்ட பெண்களின் வாழ்வு பாதிக்கப்படுகிறது. இதற்கு காரணம் என்ன ?மேலே கண்ட அனைத்து பெயர்களிலும்" MALA " என்ற எழுத்துக்களின் ஒலிச்சேர்க்கை உள்ளது.MAL  என்றால் MALE என்ற சேர்க்கை ஒலி  உண்டாகிறது .எனவே ஆண்களுக்கு உரிய தன்மைகள்  அதிகமாகிறது. மேலும் ஆண்களின் பெயர்கள்  RAMANராமன் VIMAL விமல் என்று வந்தால் அவர்களின்  திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டாகின்றன
மணமுறிவுகள் வரை கோர்ட்டுக்கு சென்று விடுகின்றன. 

SUDHA,SUSHILA  SUJATHA SUGUNA SUNDARI

இந்தப் பெயர் கொண்ட பெண்களும் தங்களது குடும்ப வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.இவர்கள்  அறிவும் திறமையும் அதிகம் உடையவர்கள்தான். ஆனாலும்  தான் என்ற கர்வம்  இருக்கும். இதனால் கணவருடன்
 இணங்கிப்  செல்ல மாட்டார்கள். கணவன் எது செய்தாலும், அதில் குற்றத்தை கண்டுபிடிப்பார்கள் .காரணம் இல்லையே கணவணிடம் கோபம் கொள்வார்கள்.  காரணம் பெயரிலுள்ள "  SU "என்ற ஒலி  தொகுப்புதான். SUE  வழக்கு தொடுத்தல், குற்றம் சுமத்துதல் என்று அர்த்தம்.

 நாளிதழ்களில
தினமும் வரும் ஆண் பெண் பிரச்சனைகள் ,குடும்பத் தகராறுகள் ,மணமுறிவுகள் போன்றவற்றுக்கு, இந்தப் பெயர் உள்ள உள்ள பெண்களும், ஆண்களுமே காரணமாக இருப்பார்கள். 

இவர்கள் தங்களது பெயர்களை எவ்வளவு சீக்கிரம் மாற்றிக் கொள்கிறார்களோ ,அவ்வளவு சீக்கிரம் அவர்கள் குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

மேலே சொன்ன பலன்களெல்லாம் பெண்களுக்கு பொதுவானது. 75 சதவீதம் வரை பெண்களுக்கு பாதிப்பை தரும். இப்போதே மாற்றிக்கொள்வது நல்லது
 

இன்று இல்லாவிட்டாலும் வருங்காலத்தில் நிச்சயம் மனப் பிரச்சனைகளை கொடுத்துவிடும்.

நாளை சந்திப்போம்


Sunday 13 September 2020

PRONOLOGY பெண்களின் பெயர்களும் அவர்களது வாழ்க்கையும்


PRONOLOGY

பெண்களின் பெயர்களும் அவர்களது குடும்ப வாழ்க்கையும்...

பெண்களின் பெயரானது நல்ல முறையில் அமைந்துவட்டால், அந்த பெயரானது நல்ல கணவனையும், தாம்பத்திய சுகத்தையும் வாரி வழங்குகிறது. குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பார்கள்.

 ஆனால் பெயர் சரியாக அமையவில்லை என்றால் ,அவளது குடும்பமும் ,தாம்பத்தியமும்  பாதிக்கப்படுகிறது

குழந்தைகளின் முன்னேற்றமும் பாதிக்கப்படுகிறது. ஒரு ஆணின் பங்கைவிட பெண்ணின்  பங்களிப்பு தான் , ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு பெரிதும் காரணமாய் இருக்கிறது .எனவே ஒவ்வொரு  பெண்ணும் தன்னுடைய பெயரை ஆராய்ந்து வைத்துக்கொண்டால், அவர்களது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். .

குடும்பத்தில் தீராத பிரச்சினை உள்ளவர்கள், கணவன் மனைவியிடயே  பிரிவினையாக  இருப்பவர்கள், தங்களது பெயர்களை  PRONOLOGY  மூலம் சரியாக ஆராய்ந்து பெயரை  சீரமைத்துக் கொண்டால், இனிமேலாவது வளமான வாழ்க்கையை பெறலாம்.இது முக்கியமான அத்தியாயமாகும் .

நியூமராலஜி புத்தகங்கள் எல்லாம் பெயரை 23 ல் வைத்துக்கொள்ளுங்கள், 19 ல் வைத்துக்கொள்ளுங்கள் என்று ஆலோசனை கூறுகிறதே  தவிர, இந்த மாதிரி பெயர்கள் வந்தால் வாழ்க்கையில் பாதிப்பு வரும் என்று சொல்வதில்லை. 

 எனவே  PRONOLOGY தான்  உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது. இனிமையான தாம்பத்தியத்திற்கு வழிகாட்டுகிறது.

VANITHA VINITHA ANITHA 

இந்த மாதிரியான பெயர்களை, தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சூட்டி மகிழ்கிறார்கள் . எண் கணிதத்தின்படி  பெயர்எண்கள்  சரியாக வந்தாலும் , PRONOLOGYபடி  மிகவும் தீயதாக உள்ளது.

 இந்த பெயர்கள் வரும் பொழுது ,அந்தப் பெண்களின் வாழ்க்கை, குறிப்பாக குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படுகிறது .கணவன் மனைவி அன்யோன்யம் பாதிக்கப்படுகிறது. 
குடும்பத்தை  சுமக்க வேண்டிய கட்டாயம இப்பெண்களுக்கு  வந்துவிடுகிறது. 

இவர்கள்எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் ,திருமணத்திற்கு பிறகு அவர்களின் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது. 

VANAJA  என்ற பெயரும் இதே பலன்களைக் கொடுக்கும். காரணம் பெயரில் வரும்" NIT" என்பது மிகவும் தீய ஒலியாகும்.". NIT" என்றால் , NIGHT  இருட்டு என்று அர்த்தம் .

எனவே இவர்கள் வாழ்க்கை பாதையில் பல   சிரமங்களைச் சந்திக்கிறார்கள். எவ்வளவு நல்ல குடும்பத்தில் பிறந்தாலும் ,திருமணத்திற்கு பிறகு பாதிப்பு வந்துவிடுகிறது. 

எனவே இந்த பெயரில் உள்ள பெண்கள உடனடியாக நல்ல பெயருக்கு ,மாற்றிக்கொள்ள வேண்டும் 

EASWARI  RAJESWARI MAHESWARI JAGADEESHWARI

இந்தப் பெயரைக் கொண்ட பெண்கள் இயல்பாகவே வேகம் ,படபடப்பு ,கோபம் கொண்டவர்கள் .மற்றவர்களை அனுசரித்து செல்லும் குணம் குறைவு. தான் என்ற பிடிவாதம், ஆணவம் போன்ற குணங்கள் இருக்கும் .தன்னுடைய கணவர் தன் சொல்லுக்கு அடங்கியிருக்க வேண்டும் என நினைப்பவர்கள். எல்லாம் தங்கள் இஷ்டப்படியேதான்  செல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் .அவர்களை  மறுத்துப் பேசினால், அங்கு ஒரு பிரளயமே ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் வேண்டாத பல பிரச்சனைகளையும் கொடுக்கும். இதன் காரணம் என்ன ?அவர்களது பெயர்களில்  " WAR "என்ற எழுத்துக்கள் உள்ளன.WAR  வார் என்ற எழுத்துக்களை சேர்க்கை ஒலியானது ,தங்களது  குணங்களாலன போராட்டம்,
 சண்டைகளை மனதில் புகுத்தி விடுகிறது.

 இந்த மாதிரி பெயர் கொண்ட பெண்களின் கணவர்மார்கள் உள்ளுக்குள் மிகவும் கஷ்டப்படுவார்கள் 
இந்த மாதிரி பெண்கள்  சீக்கிரமாக  தங்கள் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் 
அப்போதுதான்  மனதிற்குள் நிம்மதி வரும் .முதலில் கணவனை  புரிந்து கொள்வார்கள்.

NANDHINI JANANI ANANDHI

இந்த மாதிரி பெயரகள் மிகவும் அழகாக இருக்கின்றன .மேலும் ஆன்மீகப்  பெயர்களாகவும் இருக்கின்றன. எனவே  பெற்றோர்கள்  இப்பெயர்களை விரும்பி வருகிறார்கள் .ஆனால் இது நற்பலன்களை கொடுக்குமா! என்றால் இல்லை ! இவர்களுக்கு இளமையில் அறிவு ,கல்வி ,திறமை எல்லாம் நன்கு இருக்கும் .பிரச்சனை என்னவென்றால் திருமணம் தாமதமாகும். சரியான  கணவன் அமைவது கஷ்டம். குடும்ப வாழ்க்கை பல பிரச்சனைகளுடன்  இருக்கும் 

குடும்பத்தை வழி நடத்த  வேண்டிய கட்டாயம் வந்துவிடும் .காரணம் என்ன ?இவர்கள் பெயரில் உள்ள NI, NAN போன்ற தீய ஒலி கோளின்  பலன்களே ஆகும். ஏனென்றால் NAN என்றால் ஒன்றுமில்லை என்று அர்த்தம் .எனவே இவர்களுக்கு அடிக்கடி  பொருளாதார நெருக்கடிகள் வந்து சேரும்".NI" (NO)என்று முடிவது குடும்ப வாழ்க்கையில் பல சோதனைகளையும் கொடுக்கும். கணவன் மனைவி பிரிவை கூட உண்டாக்கலாம். இதை நீங்கள்  உங்களைச் சுற்றியுள்ள பல பெண்களின் வாழ்க்கையில் பார்க்கலாம்.

 எனவே இந்த பெயர் உள்ளவர்கள் தங்களது பெயர்களை உடனடியாக மாற்றிக் கொள்வது நல்லது.

நாளை சந்திப்போம்.


Saturday 12 September 2020

PRONOLOGY ஆண்களின் பெயர்களும் அவர்களின் வெற்றியும்


PRONOLOGY

ஆண்களின் பெயர்களும் அவர்களது வெற்றியும்

"உத்தியோகம் புருஷ லட்சணம் "என்பது பழமொழி. ஒரு ஆண்மகனுக்கு பெயரையும் செல்வாக்கையும் தருவது அவனது  வேலையும் (Job and Career) ,செல்வத்தின்,(Financial status) நிலையுமாகும. அதற்கு அவள் நன்கு உழைக்க வேண்டும் .பணத்தைக் குவிக்க வேண்டும் என்பது முக்கியம்.

 உலகத்தில் அனைவரும் கடுமையாக முயற்சி செய்கிறார்கள்.உழைக்கிறார்கள்.மேலும்  முயற்சியில் வெற்றி மேல் வெற்றி வந்தால் ,அவர்கள் பணத்தை குவித்து செல்வத்தையும் செல்வாக்கையும் அனுபவிக்கிறார்கள்.

 கீழே இருக்கும் பலரும் பல முயற்சிகள் செய்து, அந்த முயற்சிகளில்  தோல்வி அடைந்தவர்கள் தான். காலமும் பெயர்களும் அவர்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதே உண்மை

ஆனால்  நீங்கள் வெற்றி அடைவதற்கும், தோல்வி அடைவதற்கும் உங்களது பெயரே பிரதானமாக இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? 

நேற்று மனோகரன் மனோகர் போன்ற பெயர்களைப் பற்றி பார்த்தோம். அதைப் பற்றிய உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன் .இப்போது இன்னும் இன்னும் சில பெயர்களை பற்றிப் பார்ப்போம் . 

SUDHAKAR,சுதாகர்  SUNDER சுந்தர் ,சௌந்தர் SOUNDAR, சுந்தரராஜன் SUNDARARJAN, SOUNDARARAJAN , SUMAN சுமன் போன்ற பெயர் உள்ளவர்கள் ,மிகவும் திறமைசாலியாக இருப்பார்கள் . தங்களின் கருத்தை வலியுறுத்துவார் கள். 

அடுத்தவரின்  ஆலோசனைகளை  மறுத்துப் பேசுவார்கள். மற்றவர்களின்  கருத்தையும்  ஏற்க மாட்டார்கள் .மேலும் இவர்கள் வேண்டாத பிரச்சனைகளையும் ஏற்படுத்திக் கொள்வார்கள். 

தங்களது குடும்ப வாழ்க்கையிலும் இவர்களை மற்றவர்கள்   புரிந்து கொள்ள மாட்டார்கள். இந்த பெயர் உள்ள பலருக்கும் திருமணம் கூட  தாமதமாகிறது. 

மனைவியை இவர்கள் புரிந்து கொள்வதில்லை. அதனால் குடும்பத்தில் பிரச்சனைகளும் சண்டைகளும் அடிக்கடி ஏற்படும். இவர்கள் யார் மீதாவது ஏதாவது குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்
 இதை நீங்கள் அனுபவத்தில் உணரலாம். 

இதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்தால்  இந்தப் பெயர்களில்  உள்ள தீய ஒலிகளாகும்.  "SU "என்பது "SUE "என்று ஒலிக்கப்படும்.SUE என்றால் வழக்குப் போடுதல், குற்றம் சுமத்துவது என்பது அர்த்தம் .எனவே இந்த பெயர்  வருபவர்கள் மிகுந்த திறமை உடையவர்கள் .சுறுசுறுப்பானவர்கள் .

ஆனால் மற்றவர்களை பற்றி ஏதாவது குறை  சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இதனால் அடுத்தவர்கள் இவருடன் பேசத் தயங்குவார்கள். 

இவர்கள் முதலில் எதையும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொல்லிய பிறகே வேண்டாவெறுப்பாக ஒத்துக்கொள்வார்கள். 

பெரும்பாலோனருக்கு திருமண வாழ்க்கையில் பிரிவு ஏற்படுகிறது அல்லது யாரோ ஒருவருக்கு கண்டங்கள் ஏற்படுகிறது. 75 சதவீத மக்கள் வாழ்க்கையில், குறிப்பாக திருமண வாழ்க்கையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  

நாளிதழ்களில் வரும் கணவன் மனைவி பிரச்சனை ,தற்கொலைகள் போன்றவற்றிற்கு இந்த பெயருள்ள ஆண்களே காரணமாக இருப்பார்கள் .அதை நீங்கள் நிச்சயம் பார்க்க முடியும்

SUNDAR,SUNDARARJAN ,SOUNDARARJAN இந்த பெயருள்ள நண்பர்கள் வாழ்க்கையில் அறிவும் திறமையும் உடையவர்களாக இருக்கிறார்கள் .நன்கு வாழ்க்கையில்  முன்னேறுவார்கள்.

 ஆனால் நல்ல நிலையில் இருக்கும் பொழுது, திடீரென அவர்களுக்கு  பிரச்சனைகள் ஆரம்பித்துவிடுகின்றன. 

அதனால் அவர் நாளுக்கு நாள் இழப்புகளை சந்தித்து சந்தித்து வருவார்கள்.இதனால்  வாழ்க்கையில் கீழே வருவதற்கும் வாய்ப்பு மிக உள்ளது .

காரணம் இந்தப் பெயரின் அமைப்புத்தான் இந்த பெயரை கவனியுங்கள்
 SUNDAR சுந்தர்,SUNDARRAJAN சுந்தர்ராஜன் என்பதில் "UNDER " எனப்படும் கொடுமையான தீய ஒலி உள்ளது . அந்த தீய ஒலியானது முன்னேறிக் கொண்டிருக்கும் அவரை  தவறான முடிவுகள் எடுக்க வைத்து, அவரை நஷ்டத்தில் ஆழ்த்திவிடுகின்றது .பலரரால் ஏமாற்றப் படுவார்கள் . இதனால்  தாங்கள் ஏற்படுத்திய முன்னேற்றத்தை தக்க வைக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். 75 சதவீத மக்களுக்கு நான் சொல்வது மிக பொருத்தமாக இருக்கும். 

ஜாதகத்தின் பலன்கள் மிக நன்றாக இருந்தால் தான் இதை மாற்ற முடியும் .இருப்பினும்  UNDER என்னும் ஒலி,
  வாழ்க்கையில்  ஒரு சறுக்கலை  கொடுத்தே தீரும்.

 எனவே இந்த பெயர் வரும் அன்பர்கள் உடனே பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது திருத்திக் கொள்ள வேண்டும் .இதனால் வருங்காலத்தில் வரும் ஏமாற்றங்களை தவிர்க்கலாம் 
இன்றைய உலகில் 75% மக்கள் தங்களது  தீய பெயரிலேயே (ஒலிகளாலேயே)பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கசப்புடன் சொல்ல விரும்புகிறேன்.

 எல்லோரும் வெற்றி  அடைய வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.

நாளை சந்திப்போம்
வாழ்த்துக்கள்..

Friday 11 September 2020

PRONOLOGY ஆண்களின் பெயர்களும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றிகளும்

PRONOLOGY

 ஆண்களின்  பெயர்களும் அவரது வெற்றிகளும்.

இந்த உலகத்தில் பிறந்து விட்டோம். நாம் ஒவ்வொருவரும் கல்வி, தொழில், வருமானம் ஆகியவற்றில் சிறந்து விளங்க வேண்டும் என்றும், பேரும் புகழும் பெற்று விளங்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம .

அதற்காக இரவும் பகலும் கடுமையாக உழைக்கிறோம் .நம்மால் முன்னேற முடிந்ததா? என்றால் இல்லை  என்பதே பெரும்பாலோரின் பதில். அதற்கு காரணம் நமது பெயர் தான் என்று PRONOLOGY சொல்கிறது. 

நீங்கள் ஜோதிடரிடம் சென்றால், அவர்கள் சொல்லுவார்கள். உங்களது ஜாதகத்தில் நல்ல திசா புத்தி நடக்கிறது.
 இதற்குமேல் உங்களுக்கு எல்லாம் நல்ல பலன்கள் தான் நடக்கும் என்று சொல்வார்கள். ஆனால் அவர் சொல்லி  2 ஆண்டுகள் சென்றுவிட்டன. இருப்பினும்  நமது நிலை மாறவில்லை. அப்போது நமது மனம்  ஆதங்கப்படும். எந்த எந்த காரணத்தால் நாம் ஜெயிக்க முடியவில்லை? என்று யோசிப்பீர்கள். அதற்கான காரணத்தை வெளி உலகில் தேடுவீர்கள் . கிடைக்காது.

ஆனால் அதற்கு முக்கிய காரணம் உங்களது நெகட்டிவான பெயரே ஆகும்.ஆனால்  அதை நீங்கள் அறிவதில்லை. 

இப்போது மனிதனின் வாழ்க்கைக்கும், அவரது பெயருக்கும் உள்ள தொடர்பினை பார்ப்போம். இது மிக முக்கியமான அத்தியாயம் .உங்களது வாழ்க்கையை மாற்றவல்லது. எனவே கவனமாய் படியுங்கள். 

உங்களது பிரச்சனை உங்களது பெயரில் தான் இருக்கிறது என்று அறியுங்கள்!

MANOHAR. MANOJ , MANOJ KUMAR 

இந்த மாதிரி பெயர் உள்ள நண்பர்களை வாழ்க்கையில் பார்த்திருப்பீர்கள் .அவர்கள் அவர்கள் அறிவு திறமை என அனைத்திலும் சிறந்து விளங்குவார்கள். எதிலும் துணிந்து செயல்படுவார்கள் .ஆனாலும் வாழ்க்கையின் வெற்றிகள் சுலபத்தில் கிடைக்காது. காரணம் அவர்கள் பெயர்கள் தான் காரணம் என்பதை அறிவீர்களா?

MANOHAR மனோகர் என்ற பெயரானது எண் 25 ல் வருகிறது. இது ஓரளவு சிறந்த எண் தான். ஆனால் மனோகர் என்ற பெயரானது எதிரிடையான ஒலியில் உள்ள பெயராகும்.

MANO மனோ என்பது MAN+ NO  என்று  ஒலிக்கிறது .ஏனென்றால்  MAN என்றால் அறிவு ,திறமை ,ஆற்றல் உள்ள மனிதன் என்று அர்த்தம் .அதைக்கொண்டே அவன் நன்கு செயலாற்றுவார்.

 ஆனால் NO என்று கடுமையான நெகட்டிவ் ஒலி இருப்பதால் அவர்  எடுத்த செயல்களில் வெற்றி பெற முடியவில்லை .முடிவுகள்  பெற முடியவில்லை.

 எனவே எந்த வேலையும் அரைகுறையாக செய்யத்தான் முடியும். எனவே அவர்கள் செய்யும் தொழிலில் முன்னேற முடியவில்லை. இவர்களது ஜாதகம் எவ்வளவு சிறப்பான அளவில் இருந்தாலும், அது முழுமையான பலனை கொடுக்காது. 

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நல்ல பலன்களைக் கொடுக்கலாம். ஆனால் இறுதியில் இவரை தோல்வியில் ஆழ்த்திவிடும். உங்கள் வீட்டுக்கு அருகில் இந்த பெயரை உள்ள அன்பர்களைப்  பாருங்கள் 

பொதுவாக இந்த பெயர் உள்ள ஆண்களுக்கு மகன்கள் ஆதரவு குறைவாக கிடைக்கும். அல்லது பெண் வாரிசுகள் இருப்பதை பார்க்கலாம். 

எனக்கு தெரிந்த பல அன்பர்களுக்கு தொழில்களில் முன்னேற்றங்கள், PROMOTION  கிடைப்பதில் தாமதமும் ஏற்படுகின்றன
 இவர்கள் தங்களின் பெயரை திருத்த வேண்டியது முக்கியம். 

வேறுஒரு நல்ல பெயராக  மாற்றிக் கொள்ளும் பொழுது ,இந்த NO என்ற பெயர் தீய ஒலி மாறிவிடுகிறது .அவர்களுக்கு முன்னேற்றம் கிடைத்துவிடும். இந்த பெயரில் உள்ளவர்கள ,நமது குழுவில்  இருந்தால்  உடனடியாக தங்களது பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும்.நாம் அனைவரும் வெற்றி பெற பிறந்தவர்தான்.பெயர் தடையாக இருக்கக்கூடாது.

நல்ல பெயர் அமைக்க ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம்.
வாழ்த்துக்கள்

நாளை சந்திப்போம்
 

Wednesday 9 September 2020

PRONOLOGY உங்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எண்களை தேர்ந்தெடுப்பது எப்படி

PRONOLOGY

உங்களது அதிர்ஷ்டபெயர் எண்ணை  நீங்களே 
தேர்ந்தெடுப்பது எப்படி?

நேற்று உங்களது அதிர்ஷ்டபெயர் எண்ணை  எப்படி தேர்ந்தெடுப்பது என்பது பற்றியும், அதை எண்கணித ராசி கட்டத்தின் மூலம் அது எப்படி தேர்ந்தெடுப்பது ? சரி பார்ப்பது என்பது பற்றியெல்லாம் பார்த்தோம்.

இப்போது மேலும் சில உதாரணங்களை பற்றி பார்ப்போம்.

உங்களது பிறவி எண்கள் 3 மற்றும் 6 ஆக  இருந்தால் உங்களது பெயர் எண் 5 அல்லது 9 ல் இருந்தால் நல்லது. இப்போது நீங்கள் 45 தேர்ந்தெடுத்தீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

 இந்த 45 எண்  கன்னி ராசியில் வருகிறது. உதாரணமாக இந்த அன்பர் மேஷ லக்னம் அல்லது மேஷ ராசியாக இருந்தால், கன்னி ராசி ஆனது 6 வது ராசியாக வரும். இது மிகவும் தீய பலன்களைக் கொடுக்கும். பிரச்சனைகள் அதிகரிக்கும். போராட்டங்கள் அதிகமாகும். எனவே இவர் 36 என்ற 9 ஆம்  எண்ணை தேர்ந்தெடுக்கலாம் .

ஏனெனில் 36 எண் மிதுன ராசியில்  வருகிறது. மேஷ ராசிக்கு மூணவது ராசியாகும். மூணாவது ராசி என்றால்  நன்மையை செய்வதாகும். ஆனால் அவர் விருச்சிக ராசி என்றால் 36 எண்ணில்  பெயர் வைக்கக் கூடாது காரணம் விருச்சிக ராசிக்கு மிதுன ராசி எட்டாவது ராசியாக வரும் ஆனால் 45 எண் கன்னி ராசியில் வருகிறது.

 இது விருச்சிக ராசிக்கு லாப ஸ்தான ராசி ஆகும். எனவே இவர்களுக்கு பல நன்மைகளை கொடுக்கும் எண். அதை நன்கு ஆராய்ந்து தான் உங்கள் பெயர் என்ன தேர்வு செய்ய முடியும்.

உதாரணமாக நமது முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள்  பிறந்தநாள் எண்கள் .3 & 7.
இவரது பெயர் M KARUNANIDHI,  M. கருணாநிதி ஆகும். இதன் கூட்டுத்தொகை 37 வரும்.
 அவர் பிறந்த தேதி எண்களே பெயரில்  வருவது நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
 
மேலும் அவர் ரிஷப ராசி மற்றும் கடக லக்னம்.
அவரது பெயர் எண் 37 . இதன் அமைப்பை  கவனியுங்கள் .சிம்ம ராசியில் வரும். அதாவது லக்னத்திற்கு இரண்டாம் இடத்திலும் , ரிஷப ராசிக்கு நான்காம் இடத்திலும், 37 எண்  அமர்ந்து விட்டது. 

எனவே பேச்சுத் தறமை, அதிகாரம் ,மக்கள் செல்வாக்கு  மூலம் பெரிய பதவியை அடைந்தார்.

அடுத்ததாக நமது புகழ்பெற்ற முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் 3 மற்றும் 6 ஆடம்  எண்ணில் பிறந்தவர்கள். அவர்கள் பெயர்  J JAYALALITHAA ஜெ ஜெயலலிதா 23  எண் வரும் ,

.அவரது இயற்பெயர் கோமளவல்லி என்பதாகும். அந்த பெயரில் அவர் வெற்றி பெறவில்லை .ஜெயலலிதா என்ற பெயர் மாற்றிய பிறகு தான் அவர் மிகப்பெரிய வெற்றியடைந்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராக 15 ஆண்டுகள்  சேவை செய்தார்.

 காரணம் அவருக்கு பெயர் எண் 23 ,அவரது இரண்டாம் ராசியில் அமைந்துவிட்டது. இவர் மிதுன லக்கினக்காரர். அவரது பெயர் எண் 23 கடக ராசியில் வருகிறது. இது இரண்டாம் இடமாகும் .

எனவேதான் அவர் தனது பேச்சின் மூலமும், நடிப்பின் மூலமும் தமிழகத்தை வெற்றி கொள்ள  முடிந்தது.

வெற்றி பெற துடிக்கும் நீங்கள் ,உங்களது பெயரை நல்ல பெயர் எண்ணில் வைக்க வேண்டும். அந்தப் பெயர் எண்,எண்ராசி கட்டத்தில் நல்ல இடத்தில் அமைய வேண்டும் என்பது முக்கியமானது. மிகவும் ஆராய்ந்து பெயர் வைத்தால் தான் நீங்கள் நன்மை அடைய முடியும்.

இது முற்றிலும் புதிய விஷயமாகும். உங்களின் பெயர் எண்ணையும், எனண் ராசி கட்டத்தையும் 
 சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்.
நாளை சந்திப்போம்

Monday 7 September 2020

PRONOLOGY உங்களது அதிர்ஷ்ட காலங்கள் எது?

 PRONOLOGY

உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் காலம் எது?

நமது குழு நண்பர்களுக்கு வணக்கம்.

 நேற்று நமது வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் ஆண்டுகள் எவை என்பதை பார்த்தோம். நீங்களாகவே உங்களது வயதை கணக்கிட்டு, இந்த வயது, இந்த ஆண்டில் உள்ள  பலனை அறிந்து கொள்ளலாம் .

இதற்கு நீங்கள் இந்த  பிறந்த நாள்  முதல் அடுத்த பிறந்த நாள் வரை உள்ள உள்ள 365 தினங்களை, உங்களுககு ஒரு  ஆண்டாக கணக்கிட வேண்டும்.

இங்கு  மேலும் மீதம்  உள்ள எண்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தக்கூடிய  எண்களைப்  பற்றி பார்ப்போம்.

4ஆம் எண்ணில் பிறந்தவர்கள்

இவர்களுக்கு 1  3 5  6  9 எண்  வரும் ஆண்டுகள் நன்மையைச் செய்யும் .எண்  4  7  8 வரும் 
  ஆண்டுகள், கஷ்டங்களைக் கொடுக்கும். அதற்கு தகுந்த பூஜைகள் பரிகாரங்கள் செய்து கொள்ளலாம்..

5 ஆம்  எண்காரர்களுக்கு அதிர்ஷடம் தரும் வயதுகள்

இவர்களுக்கு 1 3  4  5 6  9 ...இந்த எண் வரும் ஆண்டுகளில், நற்பலன்கள் ஏற்படும் .ஆனால் 2  7  8  ஆகிய வருடங்களில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும்.

6 ஆம் எண்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரும் வயதுகள்

இவர்களுக்கு  1  4  5. 6  9 ஆகிய ஆண்டுகள் நன்மை செய்யும் .மற்ற 2 3 7 8 ஆகிய ஆண்டுகள் தீமைகளை  செய்யும்.

7 ஆம் எண்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் வயதுகள்.

இவர்களுக்கு 2 ,5 , 6,  9 ஆகிய ஆண்டுகள் நன்மையைச் செய்யும். 1 3  4  7 8 ஆகிய ஆண்டுகள் கெடுதலை செய்யும்.

8 ஆம்  எண்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வரும் வயது

இவர்களுக்கு 1  4  5   6  9 ஆகிய எண்கள் வரும்  வயதில் நல்ல பலன்கள் ஏற்படும் . 2  3  7 8 வரும் ஆண்டுகளில்  தீமைகளை ஏற்படுத்தும் .

9 ஆம் எண்காரர்களுக்கு அதிர்ஷ்டம்  தரும் வயதுகள்..

 இவர்களுக்கு 1  3  5  6 9 ஆகிய ஆண்டுகள் நன்மைகள் செய்யும் . மற்ற 2  4  7 8 ஆகிய ஆண்டுகள் தீமைகளை ஏற்படுத்தும்.

இதுவரையிலும் அனைவருக்கும் அதிர்ஷ்டம் ஏற்படும் வயதுகளை பற்றி தெரிந்து கொண்டோம். 

இப்போது நீங்கள் பெயரை மாற்றிய உடன், முதலில் தினமும்  குறிப்பிட்ட எண்ணிக்கையில் எழுதி வரவேண்டும் என்று பார்த்தோம் .

மேலும் கண்ணாடிப் பயிற்சி என்று ஒன்று உள்ளது. இது மிகவும் முக்கியமான ஒரு பயிற்சி ஆகும். இதை அனைவரும் செய்யலாம் .பெயர் மாற்றியவர்கள் ஓரடி*  ஓரடி உள்ள  நிலைக் கண்ணாடிக்கு முன் நின்று ,தங்களது பெயரை ஓரளவு சத்தத்துடன் சொல்லி வர வேண்டும்
" நான் வலிமை பெற்று விட்டேன் "
"வெற்றி அடைந்து வருகிறேன்"
" என்  வேலையை விரும்புகிறேன் "
"நல்ல முன்னேற்றங்களை அடைந்து வருகிறேன்" "எனது குடும்பத்தில் சந்தோசமக இருக்கிறேன்" 
"என்னிடம் இலட்சக்கணக்கான பணம் உள்ளது"
என்று எல்லா விஷயத்தலும் சந்தோசமக இருப்பதாக, கண்ணாடியில் இருக்கும் உங்கள் பிம்பத்தை பார்த்து சொல்லி வர  வேண்டும். 

அப்போது பிம்பத்தில் உள்ள நீங்கள் ,அதையே திருப்பி சொல்வீர்கள். அது உங்கள் மீது ஒலிக்கிறது. எனவே  உங்களது  மனதிற்கு  அந்த விஷயங்கள் மிக சீக்கிரம் சென்றுவிடும் .அப்போது நல்ல பலன்களை  நீங்கள் சீக்கிரம் அடையலாம். 
பெயர் மாற்றாத  ஒருவர்கூட தாங்கள் அடைய வேண்டிய வெற்றிகளை கண்ணாடி முன் நின்று சொல்லிக்கொள்ளலாம்
 

.இது தன்னம்பிக்கை  பயிற்சியாகும். ஆனால் காலையில் செய்வது நல்ல பலனைத் தரும்.

நமது குழு நண்பர்கள்   இந்த கண்ணாடிப் பயிற்சியை தினமும் செய்யுமாறு   அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 10 நிமிடங்கள் செய்ய வேண்டும். நீங்கள் விரும்பும் எந்த விஷயத்தையும் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும் 

அப்போதுதான் உங்களால் ஆழ்மனதிற்கு கட்டளையிட முடியும் . ஆழ்மனது  எப்போது நம்புகிறததோ,நிச்சயம் அது நிஜ வாழ்க்கையில் வந்துவிடும்.

வாழ்த்துக்கள்
நாளை சந்திப்போம்..

PRONOLOGY முறையில் முறையில் உங்களது அதிஷ்டக் காலத்தை தீர்மானிப்பது எப்படி?


PRONOLOGY 

புரோனலஜி  முறையில் உங்களது அதிர்ஷ்ட காலத்தை எப்படி அறிந்து கொள்வது?

ஜோதிடர்கள் ஒரு ஜாதகத்துக்கு பலன் சொல்லும்பொழுது, அவர் பிறந்ததிலிருந்து இன்றைய தினம் வரையிலும் ,திசா புத்தி  இருப்பை எடுத்துக்கொண்டு, இன்றைய நடைமுறை திசாபுத்தியை தீர்மானிப்பார்கள்.

 திசை, புத்தி இரண்டும் சாதகமாக இருந்தால். நற்பலன்களையும் ,தீயவையாக இருந்தால் தீய பலன்களையும் சொல்வார்கள். திசை அல்லது புத்தி ஏதாவது ஒன்று, நல்ல கிரகத்தின் ஆளுமையில் இருந்து விட்டாளல்  நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். 

இரண்டுமே சரியில்லை என்றால் தான் பரிகாரம் பூஜைகள் போன்றவை மூலம் தீயபலன்களை குறைத்துக்கொள்ள  வேண்டும். 

இது ஜோதிடத்தின் மிக முக்கிய அம்சமாகும் . உங்களது  திசா புத்தி இல்லாமல், உங்களுக்கு பலன்கள்  சொல்ல முடியாது
 இதுவே உண்மை..

PRONOLOGY முறையில் நல்லது கெட்டது  பலன்களை  அறிந்து கொள்வது எப்படி ?என்பது முக்கியமான கேள்வியாகும். மேலும் ஒரு திசை புத்தி என்பது சில வருடங்கள் கூட நீடிக்கும்.

ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்களை எடுத்துக்கொண்டு PRONOLOGY சில விவரங்களை கூறுகிறது
 பலன்களை கணக்கிட்டு கூறுகிறது.

ஒருவர் 4 3  1984 என்ற நாளில் பிறந்திருக்கிறார் என்று  வைத்துக் கொள்வோம் ..

அவருக்கு இன்றைய வயது
    7. 9. 2020
     4. 3.  1984
-------------------------
      3  6.     36
 இப்போது இவருக்கு 36 வருடம் ஆறு மாதம் மூன்று நாட்கள் ஆகிறது.

 அதாவது 37 ம்  வயது. நடந்து கொண்டிருக்கிறது. அதாவது ஒன்றாம் எண்ணின்  ஆதிக்கத்தில் இந்த வயது நடைபெறுகிறது .இவருக்கு ஒன்றாம் எண் அதிர்ஷ்டமாக இருக்கும் பட்சத்தில்,
 இந்த ஆண்டில் அவருக்கு உத்தியோக உயர்வு ,குடும்ப முன்னேற்றம் ,செல்வாக்கு அதிகரித்தல்  ஆகியவை உண்டாகும்
 
இதுவே அவருக்கு பாதகமாக அமைந்தால் வேலையில் பிரச்சனை ,குடும்பத்தில் சிக்கல்கள், முன்னேற்றம் இல்லாமல் இருத்தல்  போன்றவை நடைபெறும்.

வருகின்ற  4  3 2021 முதல் இவருக்கு 38 வயது நடைபெறும். இது இரண்டாம் எண்  (2)ஆதிக்கத்தில் வருகிறது

 பொதுவாக இரண்டாம் எண்  வயது ஆண்டு அனைவருக்கும் நற்பலன்களை தரும். வீடு கட்டுதல், திருமணம் செய்தல் ,குழந்தை பிறத்தல் ஆகிய நற்பலன்கள் நடைபெறும். ஒன்பதாம் எண்காரர்களுக்கு மட்டுமே இந்த  வருடம்  தீமையை செய்யும்

 இவர் பிறந்த தேதியின் எண்கள் 4&2.
ஆகும் .
இவரது பிறந்த தேதிக்கு 1  3 5  6 , 7 கூட்டுத்தொகை வரும் வயதுகள் நன்மையை செய்யும் .

பொதுவாக எட்டாம் எண்ணின் (26,35,44..) வயது, அனைவருக்கும் கஷ்டத்தையும் பிரச்சினையையும்  கொடுக்கும். மேலும் 
இவருக்கு 9  எண் வரும்  ஆண்டும்  கஷ்டங்களாகவே  நடக்கும் .காரணம் இவர் விதி எண் 2 க்கு  ஒன்பது எண் பகையாகும்


எனவே உங்களது ஜாதகத்தில் நல்ல திசா புத்திகள் இல்லையே  என்று கவலைப்பட வேண்டாம் .மேலும் அவைகள் வருடக்கணக்கில் கூட நீடிக்கும். உதாரணமாக சுக்கிர திசை சுய புத்தி 40 மாதங்களாகும் .அதாவது அதாவது மூன்று வருடங்கள் ஆகும். 

நீங்கள் நல்ல பலன்கள் நடைபெற 40 மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் PRONOLOGY முறையில்  நீங்கள் 3  ஆண்டுகளைச் சந்திக்கலாம்.

 ஒரு வருடம் தீய பலன்கள் என்றாலும், மற்ற வருடங்களில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம் .எனவே  PRONOLOGY  ரீதியான பலன்கள் நிரந்தரமானவை. 
நம்பிக்கையை கொடுப்பவை.

ஒன்று முதல் 9 வரையுள்ள வருடங்கள் மாறி மாறி வரும். எனவே பலன்களும் மாறி மாறி தான் வரும் 
இது எனகணிதத்தின்  நம்பிக்கையாகும் 

மேலும் ஜாதகத்தில் ஒருவருக்கு சூரிய திசை நடப்பு நடக்கிறது என்றால், அது அவரது வாழ்நாள் முழுவதும்  பின்பு திரும்ப வரவே வராது. ஆனால் ஒன்று முதல் 9 வரையிலும் உள்ள ஆண்டுகள் திரும்பத் திரும்ப வரும். எனவே நல்ல பலன்களும், கெட்ட பலன்களும் மாறி மாறி நடக்கும். இதுதான் ஆண்டவனின் விருப்பமாகும்.

.பலருக்கும்  இந்த எண்களின் (ஆண்டுகள்)பலன்களை இந்த முறையில் சொல்லியுள்ளேன் .
அற்புதமான முறையில் பலன்கள் பொருந்தி வருகிறது என்கிறார்கள் .

எனவே உங்களது  வயது என்ன என்பதைக் கணக்கிடுங்கள்.  இது வருடம், மாதம், நாள் என்று மூன்று பிரிவு இருக்க வேண்டும்.இதன்மூலம் பலன்களை  துல்லியமாக அறிய முடியும் 

ஒருவர். 2  9  1993 என்று வைத்துக்கொள்வோம் . அவருக்கு இன்றைய வயது எவ்வளவு என்று கணக்கிடுவோம்
7.   9.   2020.   இன்றையதேதி
2.   9.    1993.   பிறந்த தேதி
-----------------------
 5    0.          27.   இன்று வயது
அதாவது இவருக்கு 27 வயது முடிந்து 28 வயது ஆரம்பித்துவிட்டது அதாவது ஒன்றாம் எண்ணின் ஆதிக்கம் இவரது வாழ்க்கையில் ஆரம்பித்துவிட்டது எனவே சூரியனில் நற்பலன்கள் நடக்கும்.

ஒன்றாம் எண்ணில் நட்பு எண்கள்
1 2 3 4 5 6 9 இந்த எண் கொண்ட ஆண்டுகள் இவர்களுக்கு நன்மை செய்யும்.
7, 8 இந்த எண் கொண்ட வயதுகளில் சிரமமான பலன்களும், நடுத்தரமான பலன்களே ஏற்படும் .அப்போது நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்

2 இரண்டாம் எண்ணின் நட்பு எண்களின்  வயது
 1 2 3 5 6 7 ஆகிய வயதுகள் நன்மை செய்யும் .இரண்டாம்  ஆண்டுகள் எனறால் (11 வயது 20 வயது 29 வயது) என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாம் எண்  நபர்களின் அதிர்ஷ்ட ஆண்டுகள் 

இவர்களுக்கு 12 3 5  9 ஆகிய வயதுகள்  நன்மை செய்யும்.
 6 7 8 ஆகியவைகள் தீய பலன்களை ஏற்படுத்தும்.
  
  அன்பர்கள் அனைவரும் தங்களது நடப்பு வயதின் காலத்தை அறிந்து கொள்ளுங்கள். உங்களது பிறந்த தேதி எணகளுக்கு இன்றைய வயது ஆண்டு  நட்பாக இருந்தால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம் . எதிராக  இருந்தால் அதை நம் சமாளித்துக் கொள்ளலாம்.

உங்களது வயதின்  பலன் களை  அறிய புதிய  முறையைக் கொடுத்துள்ளேன். நீங்களே அதை கணித்து உங்களது அபிப்பிராயத்தை எனக்கு பதிவிடுங்கள்.நன்றி...

வாழ்த்துக்கள்

நாளை சந்திப்போம்..

Sunday 6 September 2020

PRONOLOGY அதிர்ஷ்ட பெயர்கள் பலன் தருவது எப்படி?


PRONOLOGY
அதிர்ஷ்ட பெயர்க பலன்களை எப்படி தருகின்றன?

இது ஒரு முக்கியமான கேள்வி. நீங்கள் ஒரு நல்ல  பெயரை தேர்வு செய்து விட்டீர்கள். உங்களது பழைய பெயர் ஒலி சரியாக இல்லாத காரணத்தினாலும் ,நல்ல பெயர் எண் இல்லாத காரணத்தினாலும் ஒரு புதிய பெயரினை எண்கணித நிபுணர்  மூலம்  தேர்ந்தெடுத்து விட்டீர்கள்

 இந்த பெயர் எப்படி உங்களுக்கு வேலை செய்யும்? எனக்கு நன்மைகளை எப்படி ஏற்படுத்தும்? என்பது உங்களது மில்லியன் டாலர் கேள்வியாகும்.

 பெயர் மாற்றிக் கொண்ட ஒவ்வொருவருக்கும் முன்னால் நிற்பது இந்த கேள்வியே  ஆகும். நீங்கள் அதிர்ஷ்ட பெயராக  மாற்றினால் மட்டும் போதாது. ஏனெனில் அந்தப் பெயர் இப்போது தான் பிறந்திறக்கிறது.

 உங்களது பழைய பெயரை பிறந்ததிலிருந்து இன்று வரையிலும் இலட்சக்கணக்கான தடவை  பயன்படுத்தி வந்திருக்கிறீர்கள் .உங்கள் மனதிலும் ,பள்ளிகளிலும் அந்த பெயரே, அலுவலகத்திலும் நிலைபெற்றுள்ளது. 

.இதனால் அந்த பழைய பெயர்  உங்கள் உடல், மனம் இரண்டிலும் ஊடுருவி உள்ளது .எனவே நல்ல பலன்களை அடைய  வேண்டுமென்றால், நீங்கள் உங்களது புதிய பெயரை வலுப்படுத்த வேண்டும் .

அடுத்து பழைய பெயரை முடிந்த அளவு வெகு சீக்கிரமாக மறந்துவிட வேண்டும். அப்போதுதான் புதிய பெயரின்  எண்களும், ஒலிகளும், உங்களது ஆழ் மனதிற்குள் செல்லும் .


எப்போது புதிய பெயரினை உங்கள் ஆழ்மனம் ஏற்றுக் கொண்டதோ, அன்றுமுதல் தான் புதிய பெயர் வேலை செய்ய ஆரம்பிக்கும்.
உதாரணமாக உங்கள் பெயர் ராமசாமி என்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் .

அந்த பெயர் இதுவரையில் உங்களுக்கு நன்மைகள் அதிகம் செய்யவில்லை. 
எனவே ஒரு எண்கணித நிபுணரை  அணுகுகிறீர்கள்.
 அவரும்  உங்கள் பெயரை "அஸ்வின் ராம் "ASWIN RAM ,,(23)என்று மாற்றி  இருக்கிறார் என்று  வைத்துக்கொள்வோம். 

இந்த புதிய பெயரானது நல்ல ஒலியில் இருந்தாலும், நல்ல பெயர் எண்ணில்  இருந்தாலும், உங்கள் உள்மனதிற்குள்  செல்ல வேண்டும். ஆனால்  உங்கள் உள்மனதில்  என் பெயர் "ராமசாமி "என்று பதிந்துள்ளது. அந்த பெயரை விரைவில் மறக்க வேண்டும் .புதிய பெயரின் ஒலிகள் ஆழ்மனதில் பதிய வேண்டும் . அதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளன

அவை  என்னவென்று பார்ப்போம்!
உங்களது புதுப் பெயரை ஒரு நோட்டு புத்தகத்தில் தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாயால் சொல்லிக் கொண்டு புது பெயரை (45,50..)எழுத வேண்டும் . CAPITAL LETTERS என்பது முக்கியமானது. 

அப்போது அந்த புதுப் பெயரானது சொல் மூலமும் ,எழுத்து மூலமும் ,கண் மூலமும் ,கை மூலமும், மூளைக்கு சென்றடகிறது .நான்கு வழிகளில் மூளைக்கு சென்றடைகிறதது.அப்போது மிக விரைவிலேயே உங்களது பெயரை  ஆழ்மனது  ஏற்றுக்க்கொண்டு விடுகிறது .

உதாரணமாக தற்காலத்தில் நீங்கள் ஏர்டெல் போனை பயன்படுத்துகிறீர்கள்என்று வைத்துக்கொள்வோம். 
திடீரென உங்கள் பகுதியில் ஏர்டெல் போன்கள்  வேலை செய்யவில்லை என்றால், உங்களால் யாருடனும் தொடர்பு கொள்ள முடியாது .உங்களுக்கு  அந்த  எண்  வேலை செய்யாது.
 
எனவே நீங்கள் வேறு ஒரு நிறுவனம் மூலம் ,ஜியோ என்று வைத்துக்கொள்ளுங்கள் .ஒரு புதிய  சிம் கார்டு வாங்கி ,அந்த சிம் கார்டை பயன்படுத்த போகிறீர்கள் என்றால் அன்று முதல் அந்த போனிலிருந்து, ஜியோ எண் வழியாகத்தான் உலகத்தை தொடர்பு கொள்ள முடியும். 

பழைய ஏர்டெல்  எண்ஆனது  வேலை செய்யாது.இதுபோலவே உங்களது புதிய பெயரை உங்களது உடலுக்கு கொடுத்து விட்டீர்கள். பழைய பெயரை  நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் ,அது  தனது பலன்களை கொடுக்காது.

 எப்போது உங்களுக்கு புதிய பெயர  வலிமை அடைகிறதோ , அன்று முதல் உங்களுக்குள் புதிய எண்ணங்கள் ,புதிய செயல்கள் ,புதிய பாதைகள் உங்களது  வாழ்க்கையில் தோன்றும் .

குறிப்பாக 100 நாட்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு புதிய பெயரானது ஓரளவு வலிமை  பெற்றுவிடும்.அப்போது  சூழ்நிலைகள் மாறிவரும். 

மேலும் நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் புது பெயர் கொண்டு உங்களை அழைக்க வேண்டியது அவசியம் ."பழைய  பெயர்,பழையவாழ்க்கை ,,புதிய  பெயர் புதிய வாழ்க்கை "என்பதை நினைவில் வையுங்கள். 

அனைவரும் முதலில் உங்களது பெயரை ஆராயுங்கள். நல்ல பெயராக அமைத்துக் கொள்ளுங்கள் .அந்தப் பெயரினை தினமும் தொடர்ந்து வலுப்படுத்தி வாருங்கள் .நிச்சயமாக நீங்கள் நல்ல எதிர்காலத்தை அடையலாம் .
பழைய விதிகள், பழைய சகாப்தம் முடிந்துவிட்டது! என நம்புங்கள்.
 " இன்று புதிதாக பிறந்தோம்! என்பதே புதிய பெயரின் தாரக மந்திரம்!"

நாளை சந்திப்போம்..

Saturday 5 September 2020

PRONOLOGY அதிர்ஷ்டப் பெயர்களின் முக்கியத்துவம்.


PRONOLOGY
அதிர்ஷ்டப் பெயர்களின் முக்கியத்துவம்

நாம் அனைவரும் வெற்றியை நோக்கி பயணிக்கிறோம். ஒவ்வொரு நாளிலும்  அதற்கேற்ற முயற்சிகளை செய்கிறோம். பெயர் என்பது நம்மை  இயக்கும் ஒரு அற்புதமான ஒலியாகும், மந்திர சாவி யாகும். .

அந்தப் பெயர் நன்றாக இருந்ததால்தான், நாம் வெற்றி பெற முடியும். 

உலகத்தில் பெரும்பாலோர் என்ன நினைக்கிறார்கள் என்றால்?  என் பெற்றோர்கள் என் மீது மிகுந்த பாசம் உள்ளவர்கள். அக்கறை உள்ளவர்கள் .எனக்கு நல்ல பெயரைத்தான் வைத்திருப்பார்கள் என்ற முழு நம்பிக்கையில் இருக்கிறார்கள். 

பெற்றோர்கள் அன்புக்கு பெயர் பெற்றவர்கள்தான். அவர்கள், அவருக்கு தெரிந்த  அறிவு வரையில் யோசித்து நமக்கு பெயரை வைக்கிறார்கள். அது நன்றாக இருக்கிறதா ?சுமாராக இருக்கிறதா? என்று யாரும் ஆராய்வதில்லை.

உலக  வரலாற்றிலும் சரி, இன்றைய காலகட்டத்திலும் சரி ,பெயர் சரியாக அமையப் பெற்றவர்களே தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளார்கள். மேலும் நல்ல பெயருக்கு (lucky name s) தங்கள் பெயரை மாற்றிக் கொண்டதால் தான் அரசர்களும் ,அரசியல்வாதிகளும், நடிகர்களும் மிகவும் புகழ்பெற்று விளங்கினார்கள் ,.விளங்ங்குகிறார்கள். 

பெயர் மாற்றுவதற்கும் அல்லது பெயரை சரி செய்வதற்கும்  வயது ஒன்றும் தடையில்லை. பல இளைஞர்களும், ஏன் ?ஓய்வு பெற்ற அன்பர்கள் கூட தங்களின் பெயர் மாற்றி வெற்றி பெற்றுள்ளனர் .

இனி உள்ள காலங்களிலாவது நல்ல அதிர்ஷ்டத்தையும் ,வாழ்க்கையில் வெற்றியும் பெற வேண்டும் என்பதே அவர்களின நோக்கமாக உள்ளது. எனவே நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும் சரி, எந்த பாலினமாக இருந்தாலும் சரி , PRONOLOGY மற்றும் நியூமராலஜி படி பெயர் மாற்றி வெற்றி பெறுங்கள் .

அதேபோன்று உங்களது குழந்தைகளுக்கும் நல்ல பெயரை வைத்து ,அவர்கள் வெற்றிகரமாக வெற்றிகரமாக வாழ வழிகாட்டுங்கள்.

உலகில் பணக்காரர்களை வெற்றி பெற்றவர்கள் என்று யாரும்  சொல்வதில்லை. ,ஆனால் தங்கள்  சுய முயற்சியால் வெற்றி பெற்று, பணத்தையும் புகழையும் அடைந்தவர்களே வெற்றி பெற்றவர்கள்  என்று மக்கள் பாராட்டுகிறார்கள்.

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே,
 அவர் நல்லவராவதும் தீய தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே "என்று கவிஞர் கண்ணதாசன் குறிப்பிடுகிறார். 

அது நிச்சயம் உண்மைதான் .சிறிது மாற்றங்கள் செய்து கொண்டால்,  அது சரித்திரம் ஆகிறது.
 அதாவது குழந்தை நல்லவராவதும் ,தீயவராவதும் அவரவர் பெயர்களின் சக்தியாலே  என்று இருக்க வேண்டும்.

 உலக சரித்திரத்தில் பெயரமாற்றி ,வெற்றி பெற்றவர்களை பார்ப்போம்.

அருண்மொழிவர்மன்.  சோழ இளவரசர்.இவர் தனது பெயரை ராஜராஜன் என்று பெயர்  மாற்றியவுடன் உலகத்தை வெல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

திரு ஜெங்கிஸ்கான் அவர்கள் (CHENGIS KHAN)உலகத்தில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியவர். இவரது பழைய பெயர் ஜெங்கிஸ்  (CHENGIS) என்பதாகும் .செங்கிஸ்கான் என்ற பெயரை மாற்றிய உடன் தான அவரால் உலகத்தை வெல்ல முடிந்தது.

இளைஞர் முத்தையா அவர்கள் தனது பெயரை கண்ணதாசன் மாற்றிய பின்புதான், பெரிய கவிஞராக ஒரு பிரகாசிக்க முடிந்தது.

விஜய் ராஜா என்ற இளைஞர் தான், "விஜயகாந்த் "என்று தனது பெயரை மாற்றிய உடன் தமிழ்நாட்டில் மிகப் பெரிய நடிகராக உருவெடுத்தார்

திரு சிவாஜி ராவ் என்ற இளைஞர்  தான்  "ரஜினிகாந்த்" என்று பெயர் மாற்றிய உடன் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாராக வளர முடிந்தது.

பேச்சிமுத்து என்ற இளைஞர் தான்  O P பன்னீர்செல்வம் என்று பெபரை  மாற்றியவுடன் ,தமிழக அரசியலில் வெற்றி பெற்று  முதலமைச்சராக முடிந்தது

செல்வி கோமளவள்ளி அவர்கள் தனது பெயரை ஜெயலலிதா என்று பெயர் மாற்றிய பிறகு தான் சினிமா, அரசியல் இரண்டிலும் வெற்றி பெற்று தமிழ்நாட்டை ஆள முடிந்தது.

திரு தட்சிணாமூர்த்தி என்ற இளைஞர் தான் எம் .கருணாநிதி என்று பெயர் மாற்றிய உடன் வேகமாக வளர்ந்து ,அரசியலில் வெற்றி பெற்று, தமிழ்நாட்டை பல வருடங்கள் அளவும்  முடிந்தது.

உலகத்தில் பல  நாடுகள் கூட,  தங்களது  நாட்டின் பெயர்களை மாற்றி வெற்றி பெற்றுள்ளன

தமாசிக் என்ற  நாடு "சிங்கப்பூர் "என்ற பெயர் மாற்றிய உடன மிக வேகமாக வளர்ந்து, இன்று வளமான நாடாக விளங்குகிறது.

மலாயா  என்ற நாடு "மலேசியா "என்று பெயர் மாற்றியவுடன் பல முன்னேற்றங்களை அடைந்து உள்ளது.

 பர்மா என்ற நாடு, தனது பெயரை" மியான்மர் "என்று மாற்றிக் கொண்டது .தவறான பெயர் காரணத்தால் இன்றும் மியான்மர் பல பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டுள்ளது.

இதேபோன்று சிலோன் என்ற நாடும் "ஸ்ரீலங்கா" என்று பெயர் மாற்றியவுடன் பல சோதனைகளை சந்தித்து வருகிறது.

பெயர் மாற்றுவது என்பது மனிதர்களின் அல்லது நாடுகளின் விதியை மாற்றுவது என்பது ஆகும். 

மனிதர்கள் தங்களுக்கு  பெயரை மாற்றிக் கொள்ளும்போது, நல்ல நல்ல எண்கணித நிபுணர்களை அணுக வேண்டும். ஆனால் நாடுகள் பெயர் மாற்றும் போது அதில் வல்லுநர்களை கலந்து ஆலோசிக்க வேண்டும். இல்லையெனில் அந்த நாடு பல வேண்டாத பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ள நேரிடும்.

மனிதனின் வாழ்க்கையை இரண்டு சாஸ்திரங்கள் தீரீமானிக்கின்றன.. ஒன்று ஜாதகம் .2 எண் கணிதம்.   இந்த இரண்டும் மனிதனின் வாழ்க்கையை 50  :50 சதவீதமாக ஆட்கொள்கிறது.

 நாம் எதற்கெடுத்தாலும் ஜாதகத்தையே அலசி ஆராய்கிறோம். அதனால் நமக்கு பாதி உண்மையே வெளிப்படுகிறது. பெயரில் என்ன இருக்கிறது? என்று அலட்சியமாக இருந்து விடுகிறோம் .இதுதான் மக்களின் தோல்விக்கு காரணம்.

 இறைவன் அனைவரையும் சமமாகத்தான் படைத்துள்ளார். ஆனால் நாம்தான் ஒன்றை பின்பற்றி ,மற்றொன்றை  அலட்சியம் செய்துவிடுகிறோம். 
இதனால் முழுப் பலன்களை மக்கள் அடைய முடியாமல் போகிறது .

வாழ்க்கையில் வெற்றி பெற எண் கணிதம் வழி காட்டினாலும ,மக்கள் மனக் கதவை  மூடி விடுகிறார்கள் . பாதி கிணற்றையே தாண்டுகிறார்கள்.  பின்பு கிணற்றில் விழுந்து விடுகிறார்கள்.

பின்னர் தங்களது  விதியின் மீது பழி போடுகிறார்கள் .எனவே நமது குழு நபர்கள் அனைவரும் தங்களது பெயர்களை சீர்திருத்தி ,வெற்றி பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். 

அவர்களுக்கு PRONOLOGY
 மிகவும் உதவிகரமாக இருக்கும்.

வாழ்த்துக்கள் பல!
 நாளை சந்திப்போம்.


Friday 4 September 2020

PRONOLOGY Initial முக்கியத்துவம்


PRONOLOGY

மக்களின் பெயர்களும் ,அவர்களின் இனிசியல் (INITIAL)முக்கியத்துவமும்..

பொதுவாக தமிழ்நாட்டில் ஒரு குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது குழந்தையின் தந்தைப்  பெயரின் முதல் எழுத்தை  (இனிசியல்
 என்று சொல்வார்கள்) குறிப்பது வழக்கம்.  இந்த இனிசியல் மிக வலிமை வாய்ந்தது.

 ஏனெனில் அந்த குழந்தை வாழ்க்கையின் முதல் கட்டத்தில் ,இந்த இனிசியல் எழுத்தின் பலன்களையே அனுப்விக்க வேண்டியுள்ளது .உதாரணமாக
S KANTHAN 
 என்ற பெயரை எடுத்துக்கொள்வோம் 

இதில் முதல் எழுத்து S என்பது தந்தையாரின் பெயரின் முதல் எழுத்தைக் குறிக்கும். தந்தையாரின் பெயர் சண்முகம் ,சுப்பையா எது வேண்டுமானாலும் இருக்கலாம். இது குழந்தையின் பெயரில் S என்ற  எழுத்தாக முன்னாள் வருகிறது. இது நமது தமிழ் நாட்டின் கலாச்சாரம். 

ஆனால் கேரளா, ஆந்திரா மற்றும் வட நாடுகளில்   இனிசியல்  (INITIAL) குறிப்பிடப்படுவதில்லை. அவர்கள் தங்களது பெயரை   இனிசியலாகவும் தங்களது குலத்தின் பெயரை  பேராகவும் வைத்துக் கொள்கிறார்கள். 

உதாரணமாக

K P RAO, S A PAI 

இது நமது அண்டைய  மாநிலங்களில்  வைக்கும் பெயர்களாகும. இதில் K P  என்பது அக்குழந்தையின் பெயராகவும், RAO என்பது அக்குழந்தையின் இனமாகவும் இருக்கும். 

அதே போல் தான்  S A என்பதும் குழந்தையின் பெயர் ஆகும். PAI என்பது அவர் சார்ந்த இனத்தின் பெயராகும் .அவர்களின் பெயரை பற்றி இங்கு ஆராயவில்லை .நமது தமிழ்நாட்டில் எப்படி 
பெயர்கள் வைக்கப்படுகிறது என்பதைப்பற்றி 
ஆராய்வோம்.

இது முக்கியமான விஷயமாகும்  PRONOLOGY  யில் முக்கியமான கருத்தாகும். இதை  நன்கு புரிந்து கொள்ளவும் .

S KANTHAN 

இந்தப் பெயரை கவனியுங்கள்.
 பெயர் எண்ணானது  3+23==26. 26 வரும்.ஆனால் 
கந்தன் என்ற பெயர் 23 வருகிறது .இது நல்ல பெயர் எண்  ஆகும். சிறந்த அறிவு, ஆற்றல் ,நுணுக்கங்கள் எல்லாம் கொடுக்கும்
. மக்கள் செல்வாக்கை கொடுக்கும் .ஆனால் மொத்தமாக பார்க்கும் பொழுது 26 வருகிறது. இது மிகவும் தீய பலன்களைக் கொடுக்கும். 23 எணணின்  நற்பலன்களை 26 எண் கெடுத்துவிடுகிறது.
 எனவே இவர் வாழ்க்கையில் பிரச்சினையை சந்திக்க வேண்டியதாக உள்ளது. 

இவர் எவ்வளவு செய்தாலும் வெற்றி கிடைக்காது. இதை அறியாமல் அவரும் பெயரை  அப்படியே வைத்துக் கொண்டார் என்றால் ,வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும். 

பெயரை கவனியுங்கள் . KAN என்பது  CAN எ ன்று ஒலிக்கப்படும் ஏனென்றால்  CAN என்றால், முடியும் ,ஜெயிக்க முடியும் என்று அர்த்தம். எனவே  அந்த ஒலி நல்ல ஆற்றலை கொடுக்கிறது. சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கிறது .  ANT (எறும்பு):பெயரில் வரும் இவருக்கு  எறும்பின்  சுறுசுறுப்பையும், உற்சாகத்தையும் கொடுக்கும் .எவ்வளவு வேலை இருந்தாலும் சலிக்காமல் செய்வார் .இறுதியில்  HAN  என்று  முடியும் என்று முடியும். இதுவும் CAN  என்பதை குறிக்கிறது 

எனவே KANTHAN  என்பவர்  பெரிய சாதனை செய்து வெற்றி பெறுவார் என்பது அர்த்தம். ஆனால்  S , இனிசியல் ஆக வருவதால் பெயரின் பலன்கள் மாறுபடுகிறது .
அதுமட்டுமல்ல
 பெயரின் முதல்  எழுத்தையும், அதாவது இனிசியல் மற்றும் பெயரின் முதல் எழுத்தையும் தனியே  எடுத்துக்கொள்ளுங்கள்.

S.K 

 இந்த இரண்டு எழுத்துக்களும் இணையும் பொழுது, SICK  என்று ஒலிக்கப்படும். இதனால்  நோய், உற்சாகமின்மை , செய் ட  முடியாமல் தடுமாறுதல் என்று அர்த்தமாகிறது. எனவே இவர்  தனது  முயற்சியில் வெற்றி அடைய முடியாமல் தவிக்க நேரிடும். மேலும் வேலை செய்தும் கெட்ட பெயர் வாங்க வேண்டியது உள்ளது. எனவே  S.KANTHAN  கந்தனின் பெயர் எண்  26 ஆகிவிடுகிறது. 

 இதுவே
G KANTHAN  இன்று இருப்பதாக வைத்துக் கொள்வோம் .அப்போதும் பெயர் என் 26 தான் வரும.
 இருந்தாலும் G K என்பது நல்ல பெயர் ஒலியாகும்
 இந்த பெயருடைய எண் 23   என்ற பெயரின்  நல்ல ஒலிகளை  இது அதிகரிக்க வைக்கும். 26ம்  எண்ணின் தீய பலன்கள் குறைத்துவிடும். எனவே பெயரின் இனிசியல் மிகவும் முக்கியமானது. 

பெரியரின்  முதல் எழுத்தும், INITIAL லும்   சரியாக இருக்க வேண்டும் .அப்போதுதான் பலன்கள் அதிகமாகும்.  மாறாக இருந்தால் , தீய பலன்களே கிடைக்கும்..

கீழ்க்கண்ட பெயர்களை கவனியுங்கள். இவர்கள் எத்தனை நல்ல பெயர் எண்ணில் வைத்தாலும், வாழ்க்கையில் சிரமப் படுவதையும் ,எதிர்நீச்சல் போடுவதையும் தவிர்க்க முடியாது.

S KAVIN
V KRISHNA
C KARTHIK
L SUBRAMANIAN
D ILANGOVAN
S HARITHA

போன்ற பெயர்களை கவனியுங்கள். இவர்களுடைய  INITIAL ம், முதல் எழுத்தும் சேரும்பொழுது 
SICK,WEAK,SICK.LOSS
DIE.SICK 

என்று எதிர்மறை  ஒலியாக இருப்பதால், இவர்கள் வாழ்க்கையில் சிரமங்களையும், கஷ்டங்களையும் சந்தித்தே ஆகவேண்டும்.

 இதை படிக்கும்  குழு அன்பர்கள் தங்களது பெயர்களை இந்த மாதிரி வராமல் வைத்துக்கொள்ள வேண்டும் .அப்படி இருந்தால் மாற்றிக்கொள்ள வேண்டும்.

வாழ்த்துக்கள்

நாளை சந்திப்போம்.

Wednesday 2 September 2020

PRONOLOGY பெயர் ஒலிகளின் மகத்துவம்..


PRONOLOGY

பெயர் ஒலிகளின் மகத்துவம்...

எண்கணிதம் ஒரு அற்புதமான கலை. உங்கள் பெயரின், பெயர் எண்தான் அதன் யோகத்தை தீர்மானிக்கிறது என்று கூறுகிறது .ஆனால் பல நேரங்களில் நல்ல பெயர்எண்கள்  கூட நற்பலன்களைச் செய்வதில்லை.

நமது தமிழ்நாட்டில் நடந்த சில விஷயங்களைப் பற்றி பார்ப்போம். யாரையும்  குற்றம் சொல்ல வில்லை 
. அவர்களது பெயர்களே அவர்களது பிரச்சனைக்கு  காரணமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதுவும் தப்பு கண்டுபிடிப்பதற்கு  அல்ல. உண்மையை கண்டுபிடிப்பதற்கு ஆகும். 

தமிழ்நாட்டின் மிகப்பழமையான மடம்,  காஞ்சிபுரம் சங்கரமடம் ஆகும் .இது ஆதிசங்கரரால நிறுவப்பட்டது .

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு மடத்தின் தலைவர் திரு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள் மிகவும் புகழ் பெற்று விளங்கினார்கள். உலக அளவில் நமது இந்துக்களின் பெருமை நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.அக்காலத்தில்  உலக இந்து சமய மையம்  , அமெரிக்காவில் அவர் தலைமையில் தொடங்குவதாக இருந்தது. 

ஆனால் திடீரென  அரசியலில் குழப்பம் ஏற்பட்டு, அரசியல்வாதிகளால் பழி வாங்கப்பட்டு ,அவர்கள் சிறை  செல்ல நேர்ந்தது . மேலும் இளைய பீடாதிபதி திரு விஜயேந்திர சரஸ்வதி அவர்களும் சில காலம் சிறைக்குச் செல்ல நேர்ந்துவிட்டது. இதற்கு என்ன காரணம் ?

அவர்கள் பெயர்கள் நல்ல பெயர்  எண்ணில் இருந்தாலும், அவர்களது  பெயர்கள் அவர்களது வெற்றிக்கு ஒத்துழைக்கவில்லை. என்பதே உண்மை. 

அனைவருக்கும் மிகவும் வருத்தம் ஆகிவட்டது
அவரது பெயரின் 
 ஒலிகளை கவனியுங்கள்

JAYENDRA SARASWATI 

பெயரில்  JAY,RAY  என்று வருவதால் திடீரென புகழ் அடைந்தார். வளர்ச்சியும் கிடைத்தது. SARASWATI என்ற பெயர் அறிவு , பிரகாசத்தை (WISDOM POWER)கொடுக்கும் .இந்து மதத்தில்  அற்புத ஞானத்தை கொடுக்கும். 

எனவே அவர் புகழ்பெற்ற ஆன்மீகவாதியாக விளங்கினார் .ஆனால் பெயரில்" END "என்ற தீய ஒலி வருவதால், அவரால் தொடர்ந்து வெற்றி பெற முடியவில்லை. END  என்றால் முடிவு அல்லது தடை என்று பொருள் .

எனவே அவரது வெற்றி மிக்க ஆன்மீக பயணம் திடீரென தடை ஏற்பட்டது . இந்து மக்கள் அனைவரும் கவலைப்பட்டனர். தற்போது மீண்டும் பழைய புகழை அடைவதற்காக  பல முயற்சிகள்  செய்து வருகிறார் . ஆன்மீக விஷயங்களில் மிகவும் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அவரது பெயர் தடையாக உள்ளது .அதை  அவர் சிறிது மாற்றி கொண்டால் நிச்சயமாக அவர் பெரிய அளவில் பேசபபடுவார். பழைய புகழை அடையலாம்

மேலும் அவரது  இளையவரான திரு.
VIJAYENDRA SARASWATI அவர்களின்
பெயரை கவனியுங்கள். 

அவரது பெயரிலும் VIJAY மற்றும்  SARASWATI என்ற வலுவான ஆன்மீக ஒலிகள் இருப்பதால் ,அவர் புகழ் பெற்ற ஆன்மீக வாதியாக இருக்கிறார் .அவரும் ஆன்மீகப் பாதையில்,வளர்ச்சி அடைந்து வந்தார். 

ஆனால் அவரது பெயரில் உள்ள END என்ற தீய ஒலியானது  அவரின்  முன்னேற்றத்தை தடை செய்து விட்டது .அவரும் சிறை செல்ல வேண்டிய அவசியமாகிவிட்டது .எனவே அவர்களது  ஆன்மீக பணிகள் தடைப்பட்டன .

இப்போது, மேலும் தங்களது சேவையில் மேன்மையடய மிகவும் முயற்சி செய்து வருகிறார். ஆனாலும் அவரின்  பெயரானது பெரிய தடையாக அமர்ந்து ,முன்னேற்றத்தை தடுக்கிறது.

 இவரும் தனது பெயரை சிறிய மாற்றம் செய்தால் மிகப்பெரிய வளர்ச்சி யைஅடையலாம். நமது ஆன்மீக மடமும் மீண்டும் உலகப் புகழ் அடையலாம்.
 இது என்னுடைய பேராவல். 

இதை எப்படி அவரிடம் கொண்டு சேர்ப்பது என்று தெரியவில்லை .எனினும் அவர்களின் முன்னேற்றத்தில் நான் மிகவும்  ஆர்வமாக இருக்கிறேன்.

இதேபோலத்தான் RAJENDRAN ராஜேந்திரன் ,JAYENDRAN,ஜெயேந்திரன்,NAGENDRAN நாகேந்திரன் , SURENDRAN சுரேந்திரன் போன்ற பெயர்களுடைய  அன்பர்கள், தங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத தடைகளை சந்திக்கிறார்கள் .தனது பெயரர் எண்ணை‌ மாற்றி வெற்றியடைய முயற்சிக்கிறார்கள்.ஓரளவு  முன்னேற்றத்தை அடைந்தாலும், முழுமையான வெற்றிகளை அடைய முடியவில்லை . அவர்களும்  PRONOLOGY சாஸ்திரம் மூலம் பெயரை சீரமைத்துக் கொண்டால் தடைகளை மீறி வெற்றி பெறலாம் .

வாழ்த்துக்கள்.
நாளை சந்திப்போம்..