Saturday 5 September 2020

PRONOLOGY அதிர்ஷ்டப் பெயர்களின் முக்கியத்துவம்.


PRONOLOGY
அதிர்ஷ்டப் பெயர்களின் முக்கியத்துவம்

நாம் அனைவரும் வெற்றியை நோக்கி பயணிக்கிறோம். ஒவ்வொரு நாளிலும்  அதற்கேற்ற முயற்சிகளை செய்கிறோம். பெயர் என்பது நம்மை  இயக்கும் ஒரு அற்புதமான ஒலியாகும், மந்திர சாவி யாகும். .

அந்தப் பெயர் நன்றாக இருந்ததால்தான், நாம் வெற்றி பெற முடியும். 

உலகத்தில் பெரும்பாலோர் என்ன நினைக்கிறார்கள் என்றால்?  என் பெற்றோர்கள் என் மீது மிகுந்த பாசம் உள்ளவர்கள். அக்கறை உள்ளவர்கள் .எனக்கு நல்ல பெயரைத்தான் வைத்திருப்பார்கள் என்ற முழு நம்பிக்கையில் இருக்கிறார்கள். 

பெற்றோர்கள் அன்புக்கு பெயர் பெற்றவர்கள்தான். அவர்கள், அவருக்கு தெரிந்த  அறிவு வரையில் யோசித்து நமக்கு பெயரை வைக்கிறார்கள். அது நன்றாக இருக்கிறதா ?சுமாராக இருக்கிறதா? என்று யாரும் ஆராய்வதில்லை.

உலக  வரலாற்றிலும் சரி, இன்றைய காலகட்டத்திலும் சரி ,பெயர் சரியாக அமையப் பெற்றவர்களே தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளார்கள். மேலும் நல்ல பெயருக்கு (lucky name s) தங்கள் பெயரை மாற்றிக் கொண்டதால் தான் அரசர்களும் ,அரசியல்வாதிகளும், நடிகர்களும் மிகவும் புகழ்பெற்று விளங்கினார்கள் ,.விளங்ங்குகிறார்கள். 

பெயர் மாற்றுவதற்கும் அல்லது பெயரை சரி செய்வதற்கும்  வயது ஒன்றும் தடையில்லை. பல இளைஞர்களும், ஏன் ?ஓய்வு பெற்ற அன்பர்கள் கூட தங்களின் பெயர் மாற்றி வெற்றி பெற்றுள்ளனர் .

இனி உள்ள காலங்களிலாவது நல்ல அதிர்ஷ்டத்தையும் ,வாழ்க்கையில் வெற்றியும் பெற வேண்டும் என்பதே அவர்களின நோக்கமாக உள்ளது. எனவே நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும் சரி, எந்த பாலினமாக இருந்தாலும் சரி , PRONOLOGY மற்றும் நியூமராலஜி படி பெயர் மாற்றி வெற்றி பெறுங்கள் .

அதேபோன்று உங்களது குழந்தைகளுக்கும் நல்ல பெயரை வைத்து ,அவர்கள் வெற்றிகரமாக வெற்றிகரமாக வாழ வழிகாட்டுங்கள்.

உலகில் பணக்காரர்களை வெற்றி பெற்றவர்கள் என்று யாரும்  சொல்வதில்லை. ,ஆனால் தங்கள்  சுய முயற்சியால் வெற்றி பெற்று, பணத்தையும் புகழையும் அடைந்தவர்களே வெற்றி பெற்றவர்கள்  என்று மக்கள் பாராட்டுகிறார்கள்.

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே,
 அவர் நல்லவராவதும் தீய தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே "என்று கவிஞர் கண்ணதாசன் குறிப்பிடுகிறார். 

அது நிச்சயம் உண்மைதான் .சிறிது மாற்றங்கள் செய்து கொண்டால்,  அது சரித்திரம் ஆகிறது.
 அதாவது குழந்தை நல்லவராவதும் ,தீயவராவதும் அவரவர் பெயர்களின் சக்தியாலே  என்று இருக்க வேண்டும்.

 உலக சரித்திரத்தில் பெயரமாற்றி ,வெற்றி பெற்றவர்களை பார்ப்போம்.

அருண்மொழிவர்மன்.  சோழ இளவரசர்.இவர் தனது பெயரை ராஜராஜன் என்று பெயர்  மாற்றியவுடன் உலகத்தை வெல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

திரு ஜெங்கிஸ்கான் அவர்கள் (CHENGIS KHAN)உலகத்தில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியவர். இவரது பழைய பெயர் ஜெங்கிஸ்  (CHENGIS) என்பதாகும் .செங்கிஸ்கான் என்ற பெயரை மாற்றிய உடன் தான அவரால் உலகத்தை வெல்ல முடிந்தது.

இளைஞர் முத்தையா அவர்கள் தனது பெயரை கண்ணதாசன் மாற்றிய பின்புதான், பெரிய கவிஞராக ஒரு பிரகாசிக்க முடிந்தது.

விஜய் ராஜா என்ற இளைஞர் தான், "விஜயகாந்த் "என்று தனது பெயரை மாற்றிய உடன் தமிழ்நாட்டில் மிகப் பெரிய நடிகராக உருவெடுத்தார்

திரு சிவாஜி ராவ் என்ற இளைஞர்  தான்  "ரஜினிகாந்த்" என்று பெயர் மாற்றிய உடன் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாராக வளர முடிந்தது.

பேச்சிமுத்து என்ற இளைஞர் தான்  O P பன்னீர்செல்வம் என்று பெபரை  மாற்றியவுடன் ,தமிழக அரசியலில் வெற்றி பெற்று  முதலமைச்சராக முடிந்தது

செல்வி கோமளவள்ளி அவர்கள் தனது பெயரை ஜெயலலிதா என்று பெயர் மாற்றிய பிறகு தான் சினிமா, அரசியல் இரண்டிலும் வெற்றி பெற்று தமிழ்நாட்டை ஆள முடிந்தது.

திரு தட்சிணாமூர்த்தி என்ற இளைஞர் தான் எம் .கருணாநிதி என்று பெயர் மாற்றிய உடன் வேகமாக வளர்ந்து ,அரசியலில் வெற்றி பெற்று, தமிழ்நாட்டை பல வருடங்கள் அளவும்  முடிந்தது.

உலகத்தில் பல  நாடுகள் கூட,  தங்களது  நாட்டின் பெயர்களை மாற்றி வெற்றி பெற்றுள்ளன

தமாசிக் என்ற  நாடு "சிங்கப்பூர் "என்ற பெயர் மாற்றிய உடன மிக வேகமாக வளர்ந்து, இன்று வளமான நாடாக விளங்குகிறது.

மலாயா  என்ற நாடு "மலேசியா "என்று பெயர் மாற்றியவுடன் பல முன்னேற்றங்களை அடைந்து உள்ளது.

 பர்மா என்ற நாடு, தனது பெயரை" மியான்மர் "என்று மாற்றிக் கொண்டது .தவறான பெயர் காரணத்தால் இன்றும் மியான்மர் பல பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டுள்ளது.

இதேபோன்று சிலோன் என்ற நாடும் "ஸ்ரீலங்கா" என்று பெயர் மாற்றியவுடன் பல சோதனைகளை சந்தித்து வருகிறது.

பெயர் மாற்றுவது என்பது மனிதர்களின் அல்லது நாடுகளின் விதியை மாற்றுவது என்பது ஆகும். 

மனிதர்கள் தங்களுக்கு  பெயரை மாற்றிக் கொள்ளும்போது, நல்ல நல்ல எண்கணித நிபுணர்களை அணுக வேண்டும். ஆனால் நாடுகள் பெயர் மாற்றும் போது அதில் வல்லுநர்களை கலந்து ஆலோசிக்க வேண்டும். இல்லையெனில் அந்த நாடு பல வேண்டாத பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ள நேரிடும்.

மனிதனின் வாழ்க்கையை இரண்டு சாஸ்திரங்கள் தீரீமானிக்கின்றன.. ஒன்று ஜாதகம் .2 எண் கணிதம்.   இந்த இரண்டும் மனிதனின் வாழ்க்கையை 50  :50 சதவீதமாக ஆட்கொள்கிறது.

 நாம் எதற்கெடுத்தாலும் ஜாதகத்தையே அலசி ஆராய்கிறோம். அதனால் நமக்கு பாதி உண்மையே வெளிப்படுகிறது. பெயரில் என்ன இருக்கிறது? என்று அலட்சியமாக இருந்து விடுகிறோம் .இதுதான் மக்களின் தோல்விக்கு காரணம்.

 இறைவன் அனைவரையும் சமமாகத்தான் படைத்துள்ளார். ஆனால் நாம்தான் ஒன்றை பின்பற்றி ,மற்றொன்றை  அலட்சியம் செய்துவிடுகிறோம். 
இதனால் முழுப் பலன்களை மக்கள் அடைய முடியாமல் போகிறது .

வாழ்க்கையில் வெற்றி பெற எண் கணிதம் வழி காட்டினாலும ,மக்கள் மனக் கதவை  மூடி விடுகிறார்கள் . பாதி கிணற்றையே தாண்டுகிறார்கள்.  பின்பு கிணற்றில் விழுந்து விடுகிறார்கள்.

பின்னர் தங்களது  விதியின் மீது பழி போடுகிறார்கள் .எனவே நமது குழு நபர்கள் அனைவரும் தங்களது பெயர்களை சீர்திருத்தி ,வெற்றி பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். 

அவர்களுக்கு PRONOLOGY
 மிகவும் உதவிகரமாக இருக்கும்.

வாழ்த்துக்கள் பல!
 நாளை சந்திப்போம்.