Sunday 6 September 2020

PRONOLOGY அதிர்ஷ்ட பெயர்கள் பலன் தருவது எப்படி?


PRONOLOGY
அதிர்ஷ்ட பெயர்க பலன்களை எப்படி தருகின்றன?

இது ஒரு முக்கியமான கேள்வி. நீங்கள் ஒரு நல்ல  பெயரை தேர்வு செய்து விட்டீர்கள். உங்களது பழைய பெயர் ஒலி சரியாக இல்லாத காரணத்தினாலும் ,நல்ல பெயர் எண் இல்லாத காரணத்தினாலும் ஒரு புதிய பெயரினை எண்கணித நிபுணர்  மூலம்  தேர்ந்தெடுத்து விட்டீர்கள்

 இந்த பெயர் எப்படி உங்களுக்கு வேலை செய்யும்? எனக்கு நன்மைகளை எப்படி ஏற்படுத்தும்? என்பது உங்களது மில்லியன் டாலர் கேள்வியாகும்.

 பெயர் மாற்றிக் கொண்ட ஒவ்வொருவருக்கும் முன்னால் நிற்பது இந்த கேள்வியே  ஆகும். நீங்கள் அதிர்ஷ்ட பெயராக  மாற்றினால் மட்டும் போதாது. ஏனெனில் அந்தப் பெயர் இப்போது தான் பிறந்திறக்கிறது.

 உங்களது பழைய பெயரை பிறந்ததிலிருந்து இன்று வரையிலும் இலட்சக்கணக்கான தடவை  பயன்படுத்தி வந்திருக்கிறீர்கள் .உங்கள் மனதிலும் ,பள்ளிகளிலும் அந்த பெயரே, அலுவலகத்திலும் நிலைபெற்றுள்ளது. 

.இதனால் அந்த பழைய பெயர்  உங்கள் உடல், மனம் இரண்டிலும் ஊடுருவி உள்ளது .எனவே நல்ல பலன்களை அடைய  வேண்டுமென்றால், நீங்கள் உங்களது புதிய பெயரை வலுப்படுத்த வேண்டும் .

அடுத்து பழைய பெயரை முடிந்த அளவு வெகு சீக்கிரமாக மறந்துவிட வேண்டும். அப்போதுதான் புதிய பெயரின்  எண்களும், ஒலிகளும், உங்களது ஆழ் மனதிற்குள் செல்லும் .


எப்போது புதிய பெயரினை உங்கள் ஆழ்மனம் ஏற்றுக் கொண்டதோ, அன்றுமுதல் தான் புதிய பெயர் வேலை செய்ய ஆரம்பிக்கும்.
உதாரணமாக உங்கள் பெயர் ராமசாமி என்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் .

அந்த பெயர் இதுவரையில் உங்களுக்கு நன்மைகள் அதிகம் செய்யவில்லை. 
எனவே ஒரு எண்கணித நிபுணரை  அணுகுகிறீர்கள்.
 அவரும்  உங்கள் பெயரை "அஸ்வின் ராம் "ASWIN RAM ,,(23)என்று மாற்றி  இருக்கிறார் என்று  வைத்துக்கொள்வோம். 

இந்த புதிய பெயரானது நல்ல ஒலியில் இருந்தாலும், நல்ல பெயர் எண்ணில்  இருந்தாலும், உங்கள் உள்மனதிற்குள்  செல்ல வேண்டும். ஆனால்  உங்கள் உள்மனதில்  என் பெயர் "ராமசாமி "என்று பதிந்துள்ளது. அந்த பெயரை விரைவில் மறக்க வேண்டும் .புதிய பெயரின் ஒலிகள் ஆழ்மனதில் பதிய வேண்டும் . அதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளன

அவை  என்னவென்று பார்ப்போம்!
உங்களது புதுப் பெயரை ஒரு நோட்டு புத்தகத்தில் தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாயால் சொல்லிக் கொண்டு புது பெயரை (45,50..)எழுத வேண்டும் . CAPITAL LETTERS என்பது முக்கியமானது. 

அப்போது அந்த புதுப் பெயரானது சொல் மூலமும் ,எழுத்து மூலமும் ,கண் மூலமும் ,கை மூலமும், மூளைக்கு சென்றடகிறது .நான்கு வழிகளில் மூளைக்கு சென்றடைகிறதது.அப்போது மிக விரைவிலேயே உங்களது பெயரை  ஆழ்மனது  ஏற்றுக்க்கொண்டு விடுகிறது .

உதாரணமாக தற்காலத்தில் நீங்கள் ஏர்டெல் போனை பயன்படுத்துகிறீர்கள்என்று வைத்துக்கொள்வோம். 
திடீரென உங்கள் பகுதியில் ஏர்டெல் போன்கள்  வேலை செய்யவில்லை என்றால், உங்களால் யாருடனும் தொடர்பு கொள்ள முடியாது .உங்களுக்கு  அந்த  எண்  வேலை செய்யாது.
 
எனவே நீங்கள் வேறு ஒரு நிறுவனம் மூலம் ,ஜியோ என்று வைத்துக்கொள்ளுங்கள் .ஒரு புதிய  சிம் கார்டு வாங்கி ,அந்த சிம் கார்டை பயன்படுத்த போகிறீர்கள் என்றால் அன்று முதல் அந்த போனிலிருந்து, ஜியோ எண் வழியாகத்தான் உலகத்தை தொடர்பு கொள்ள முடியும். 

பழைய ஏர்டெல்  எண்ஆனது  வேலை செய்யாது.இதுபோலவே உங்களது புதிய பெயரை உங்களது உடலுக்கு கொடுத்து விட்டீர்கள். பழைய பெயரை  நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் ,அது  தனது பலன்களை கொடுக்காது.

 எப்போது உங்களுக்கு புதிய பெயர  வலிமை அடைகிறதோ , அன்று முதல் உங்களுக்குள் புதிய எண்ணங்கள் ,புதிய செயல்கள் ,புதிய பாதைகள் உங்களது  வாழ்க்கையில் தோன்றும் .

குறிப்பாக 100 நாட்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு புதிய பெயரானது ஓரளவு வலிமை  பெற்றுவிடும்.அப்போது  சூழ்நிலைகள் மாறிவரும். 

மேலும் நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் புது பெயர் கொண்டு உங்களை அழைக்க வேண்டியது அவசியம் ."பழைய  பெயர்,பழையவாழ்க்கை ,,புதிய  பெயர் புதிய வாழ்க்கை "என்பதை நினைவில் வையுங்கள். 

அனைவரும் முதலில் உங்களது பெயரை ஆராயுங்கள். நல்ல பெயராக அமைத்துக் கொள்ளுங்கள் .அந்தப் பெயரினை தினமும் தொடர்ந்து வலுப்படுத்தி வாருங்கள் .நிச்சயமாக நீங்கள் நல்ல எதிர்காலத்தை அடையலாம் .
பழைய விதிகள், பழைய சகாப்தம் முடிந்துவிட்டது! என நம்புங்கள்.
 " இன்று புதிதாக பிறந்தோம்! என்பதே புதிய பெயரின் தாரக மந்திரம்!"

நாளை சந்திப்போம்..