Wednesday 2 September 2020

PRONOLOGY பெயர் ஒலிகளின் மகத்துவம்..


PRONOLOGY

பெயர் ஒலிகளின் மகத்துவம்...

எண்கணிதம் ஒரு அற்புதமான கலை. உங்கள் பெயரின், பெயர் எண்தான் அதன் யோகத்தை தீர்மானிக்கிறது என்று கூறுகிறது .ஆனால் பல நேரங்களில் நல்ல பெயர்எண்கள்  கூட நற்பலன்களைச் செய்வதில்லை.

நமது தமிழ்நாட்டில் நடந்த சில விஷயங்களைப் பற்றி பார்ப்போம். யாரையும்  குற்றம் சொல்ல வில்லை 
. அவர்களது பெயர்களே அவர்களது பிரச்சனைக்கு  காரணமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதுவும் தப்பு கண்டுபிடிப்பதற்கு  அல்ல. உண்மையை கண்டுபிடிப்பதற்கு ஆகும். 

தமிழ்நாட்டின் மிகப்பழமையான மடம்,  காஞ்சிபுரம் சங்கரமடம் ஆகும் .இது ஆதிசங்கரரால நிறுவப்பட்டது .

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு மடத்தின் தலைவர் திரு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள் மிகவும் புகழ் பெற்று விளங்கினார்கள். உலக அளவில் நமது இந்துக்களின் பெருமை நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.அக்காலத்தில்  உலக இந்து சமய மையம்  , அமெரிக்காவில் அவர் தலைமையில் தொடங்குவதாக இருந்தது. 

ஆனால் திடீரென  அரசியலில் குழப்பம் ஏற்பட்டு, அரசியல்வாதிகளால் பழி வாங்கப்பட்டு ,அவர்கள் சிறை  செல்ல நேர்ந்தது . மேலும் இளைய பீடாதிபதி திரு விஜயேந்திர சரஸ்வதி அவர்களும் சில காலம் சிறைக்குச் செல்ல நேர்ந்துவிட்டது. இதற்கு என்ன காரணம் ?

அவர்கள் பெயர்கள் நல்ல பெயர்  எண்ணில் இருந்தாலும், அவர்களது  பெயர்கள் அவர்களது வெற்றிக்கு ஒத்துழைக்கவில்லை. என்பதே உண்மை. 

அனைவருக்கும் மிகவும் வருத்தம் ஆகிவட்டது
அவரது பெயரின் 
 ஒலிகளை கவனியுங்கள்

JAYENDRA SARASWATI 

பெயரில்  JAY,RAY  என்று வருவதால் திடீரென புகழ் அடைந்தார். வளர்ச்சியும் கிடைத்தது. SARASWATI என்ற பெயர் அறிவு , பிரகாசத்தை (WISDOM POWER)கொடுக்கும் .இந்து மதத்தில்  அற்புத ஞானத்தை கொடுக்கும். 

எனவே அவர் புகழ்பெற்ற ஆன்மீகவாதியாக விளங்கினார் .ஆனால் பெயரில்" END "என்ற தீய ஒலி வருவதால், அவரால் தொடர்ந்து வெற்றி பெற முடியவில்லை. END  என்றால் முடிவு அல்லது தடை என்று பொருள் .

எனவே அவரது வெற்றி மிக்க ஆன்மீக பயணம் திடீரென தடை ஏற்பட்டது . இந்து மக்கள் அனைவரும் கவலைப்பட்டனர். தற்போது மீண்டும் பழைய புகழை அடைவதற்காக  பல முயற்சிகள்  செய்து வருகிறார் . ஆன்மீக விஷயங்களில் மிகவும் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அவரது பெயர் தடையாக உள்ளது .அதை  அவர் சிறிது மாற்றி கொண்டால் நிச்சயமாக அவர் பெரிய அளவில் பேசபபடுவார். பழைய புகழை அடையலாம்

மேலும் அவரது  இளையவரான திரு.
VIJAYENDRA SARASWATI அவர்களின்
பெயரை கவனியுங்கள். 

அவரது பெயரிலும் VIJAY மற்றும்  SARASWATI என்ற வலுவான ஆன்மீக ஒலிகள் இருப்பதால் ,அவர் புகழ் பெற்ற ஆன்மீக வாதியாக இருக்கிறார் .அவரும் ஆன்மீகப் பாதையில்,வளர்ச்சி அடைந்து வந்தார். 

ஆனால் அவரது பெயரில் உள்ள END என்ற தீய ஒலியானது  அவரின்  முன்னேற்றத்தை தடை செய்து விட்டது .அவரும் சிறை செல்ல வேண்டிய அவசியமாகிவிட்டது .எனவே அவர்களது  ஆன்மீக பணிகள் தடைப்பட்டன .

இப்போது, மேலும் தங்களது சேவையில் மேன்மையடய மிகவும் முயற்சி செய்து வருகிறார். ஆனாலும் அவரின்  பெயரானது பெரிய தடையாக அமர்ந்து ,முன்னேற்றத்தை தடுக்கிறது.

 இவரும் தனது பெயரை சிறிய மாற்றம் செய்தால் மிகப்பெரிய வளர்ச்சி யைஅடையலாம். நமது ஆன்மீக மடமும் மீண்டும் உலகப் புகழ் அடையலாம்.
 இது என்னுடைய பேராவல். 

இதை எப்படி அவரிடம் கொண்டு சேர்ப்பது என்று தெரியவில்லை .எனினும் அவர்களின் முன்னேற்றத்தில் நான் மிகவும்  ஆர்வமாக இருக்கிறேன்.

இதேபோலத்தான் RAJENDRAN ராஜேந்திரன் ,JAYENDRAN,ஜெயேந்திரன்,NAGENDRAN நாகேந்திரன் , SURENDRAN சுரேந்திரன் போன்ற பெயர்களுடைய  அன்பர்கள், தங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத தடைகளை சந்திக்கிறார்கள் .தனது பெயரர் எண்ணை‌ மாற்றி வெற்றியடைய முயற்சிக்கிறார்கள்.ஓரளவு  முன்னேற்றத்தை அடைந்தாலும், முழுமையான வெற்றிகளை அடைய முடியவில்லை . அவர்களும்  PRONOLOGY சாஸ்திரம் மூலம் பெயரை சீரமைத்துக் கொண்டால் தடைகளை மீறி வெற்றி பெறலாம் .

வாழ்த்துக்கள்.
நாளை சந்திப்போம்..