PRONOLOGY
மக்களின் பெயர்களும் ,அவர்களின் இனிசியல் (INITIAL)முக்கியத்துவமும்..
பொதுவாக தமிழ்நாட்டில் ஒரு குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது குழந்தையின் தந்தைப் பெயரின் முதல் எழுத்தை (இனிசியல்
என்று சொல்வார்கள்) குறிப்பது வழக்கம். இந்த இனிசியல் மிக வலிமை வாய்ந்தது.
ஏனெனில் அந்த குழந்தை வாழ்க்கையின் முதல் கட்டத்தில் ,இந்த இனிசியல் எழுத்தின் பலன்களையே அனுப்விக்க வேண்டியுள்ளது .உதாரணமாக
S KANTHAN
என்ற பெயரை எடுத்துக்கொள்வோம்
இதில் முதல் எழுத்து S என்பது தந்தையாரின் பெயரின் முதல் எழுத்தைக் குறிக்கும். தந்தையாரின் பெயர் சண்முகம் ,சுப்பையா எது வேண்டுமானாலும் இருக்கலாம். இது குழந்தையின் பெயரில் S என்ற எழுத்தாக முன்னாள் வருகிறது. இது நமது தமிழ் நாட்டின் கலாச்சாரம்.
ஆனால் கேரளா, ஆந்திரா மற்றும் வட நாடுகளில் இனிசியல் (INITIAL) குறிப்பிடப்படுவதில்லை. அவர்கள் தங்களது பெயரை இனிசியலாகவும் தங்களது குலத்தின் பெயரை பேராகவும் வைத்துக் கொள்கிறார்கள்.
உதாரணமாக
K P RAO, S A PAI
இது நமது அண்டைய மாநிலங்களில் வைக்கும் பெயர்களாகும. இதில் K P என்பது அக்குழந்தையின் பெயராகவும், RAO என்பது அக்குழந்தையின் இனமாகவும் இருக்கும்.
அதே போல் தான் S A என்பதும் குழந்தையின் பெயர் ஆகும். PAI என்பது அவர் சார்ந்த இனத்தின் பெயராகும் .அவர்களின் பெயரை பற்றி இங்கு ஆராயவில்லை .நமது தமிழ்நாட்டில் எப்படி
பெயர்கள் வைக்கப்படுகிறது என்பதைப்பற்றி
ஆராய்வோம்.
இது முக்கியமான விஷயமாகும் PRONOLOGY யில் முக்கியமான கருத்தாகும். இதை நன்கு புரிந்து கொள்ளவும் .
S KANTHAN
இந்தப் பெயரை கவனியுங்கள்.
பெயர் எண்ணானது 3+23==26. 26 வரும்.ஆனால்
கந்தன் என்ற பெயர் 23 வருகிறது .இது நல்ல பெயர் எண் ஆகும். சிறந்த அறிவு, ஆற்றல் ,நுணுக்கங்கள் எல்லாம் கொடுக்கும்
. மக்கள் செல்வாக்கை கொடுக்கும் .ஆனால் மொத்தமாக பார்க்கும் பொழுது 26 வருகிறது. இது மிகவும் தீய பலன்களைக் கொடுக்கும். 23 எணணின் நற்பலன்களை 26 எண் கெடுத்துவிடுகிறது.
எனவே இவர் வாழ்க்கையில் பிரச்சினையை சந்திக்க வேண்டியதாக உள்ளது.
இவர் எவ்வளவு செய்தாலும் வெற்றி கிடைக்காது. இதை அறியாமல் அவரும் பெயரை அப்படியே வைத்துக் கொண்டார் என்றால் ,வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும்.
பெயரை கவனியுங்கள் . KAN என்பது CAN எ ன்று ஒலிக்கப்படும் ஏனென்றால் CAN என்றால், முடியும் ,ஜெயிக்க முடியும் என்று அர்த்தம். எனவே அந்த ஒலி நல்ல ஆற்றலை கொடுக்கிறது. சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கிறது . ANT (எறும்பு):பெயரில் வரும் இவருக்கு எறும்பின் சுறுசுறுப்பையும், உற்சாகத்தையும் கொடுக்கும் .எவ்வளவு வேலை இருந்தாலும் சலிக்காமல் செய்வார் .இறுதியில் HAN என்று முடியும் என்று முடியும். இதுவும் CAN என்பதை குறிக்கிறது
எனவே KANTHAN என்பவர் பெரிய சாதனை செய்து வெற்றி பெறுவார் என்பது அர்த்தம். ஆனால் S , இனிசியல் ஆக வருவதால் பெயரின் பலன்கள் மாறுபடுகிறது .
அதுமட்டுமல்ல
பெயரின் முதல் எழுத்தையும், அதாவது இனிசியல் மற்றும் பெயரின் முதல் எழுத்தையும் தனியே எடுத்துக்கொள்ளுங்கள்.
S.K
இந்த இரண்டு எழுத்துக்களும் இணையும் பொழுது, SICK என்று ஒலிக்கப்படும். இதனால் நோய், உற்சாகமின்மை , செய் ட முடியாமல் தடுமாறுதல் என்று அர்த்தமாகிறது. எனவே இவர் தனது முயற்சியில் வெற்றி அடைய முடியாமல் தவிக்க நேரிடும். மேலும் வேலை செய்தும் கெட்ட பெயர் வாங்க வேண்டியது உள்ளது. எனவே S.KANTHAN கந்தனின் பெயர் எண் 26 ஆகிவிடுகிறது.
இதுவே
G KANTHAN இன்று இருப்பதாக வைத்துக் கொள்வோம் .அப்போதும் பெயர் என் 26 தான் வரும.
இருந்தாலும் G K என்பது நல்ல பெயர் ஒலியாகும்
இந்த பெயருடைய எண் 23 என்ற பெயரின் நல்ல ஒலிகளை இது அதிகரிக்க வைக்கும். 26ம் எண்ணின் தீய பலன்கள் குறைத்துவிடும். எனவே பெயரின் இனிசியல் மிகவும் முக்கியமானது.
பெரியரின் முதல் எழுத்தும், INITIAL லும் சரியாக இருக்க வேண்டும் .அப்போதுதான் பலன்கள் அதிகமாகும். மாறாக இருந்தால் , தீய பலன்களே கிடைக்கும்..
கீழ்க்கண்ட பெயர்களை கவனியுங்கள். இவர்கள் எத்தனை நல்ல பெயர் எண்ணில் வைத்தாலும், வாழ்க்கையில் சிரமப் படுவதையும் ,எதிர்நீச்சல் போடுவதையும் தவிர்க்க முடியாது.
S KAVIN
V KRISHNA
C KARTHIK
L SUBRAMANIAN
D ILANGOVAN
S HARITHA
போன்ற பெயர்களை கவனியுங்கள். இவர்களுடைய INITIAL ம், முதல் எழுத்தும் சேரும்பொழுது
SICK,WEAK,SICK.LOSS
DIE.SICK
என்று எதிர்மறை ஒலியாக இருப்பதால், இவர்கள் வாழ்க்கையில் சிரமங்களையும், கஷ்டங்களையும் சந்தித்தே ஆகவேண்டும்.
இதை படிக்கும் குழு அன்பர்கள் தங்களது பெயர்களை இந்த மாதிரி வராமல் வைத்துக்கொள்ள வேண்டும் .அப்படி இருந்தால் மாற்றிக்கொள்ள வேண்டும்.
வாழ்த்துக்கள்
நாளை சந்திப்போம்.